tamilnadu

img

40 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பக் கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

40 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

 நிரப்பக் கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூன் 19 - 40 ஆயிரம் ஆரம்ப கட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வியா ழனன்று (ஜூன் 19) மாநிலம் முழுவதும் மின்வாரிய ஊழி யர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தமிழ்நாடு மின்சார வாரி யத்தில் 40 ஆயிரம் ஆரம்ப கட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை அடையாளங் கண்டு வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும், 1.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், கேங்மேன் பணி யாளர்களுக்கு ஊர் மாற்றம், கள உதவியாளர் பதவி மாற்றம் வழங்குவதோடு, 6 விழுக்காடு ஊதிய உயர்வு தர வேண்டும். நுகர்வோரை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும், விடு பட்ட பகுதி நேரப் பணியா ளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கணக் கீட்டு பணியாளர்களுக்கு செல்போன் அல்லது டேப் வழங்க வேண்டும் ஆகிய 6  அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பி னர் இந்த போராட்டத்தை நடத்தினர். சென்னை வடக்கு சென்னை வடக்கு திட்டம் சார்பில் வில்லிவாக்கம் மேற்பார்வை பொறியா ளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் தி.ஜெய் சங்கர், கிளைத்தலைவர் கதி ரேசன், செயலாளர் இ.சந்திர சேகர், பொருளாளர் சத்திய மூர்த்தி, கவுரவ தலைவர் மதன் கோபால், துணைத் தலைவர் சாலட் உள்ளிட் டோர் பேசினர். சென்னை தெற்கு-1 சென்னை தெற்கு-1 திட்டம் சார்பில் கே.கே.நகர் மேற்பார்வை பொறியா ளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு திட்டத் தலைவர் டி.பண்டாரம் பிள்ளை  தலைமை தாங்கினார். சென்னை மண்டலச் செய லாளர் ஏ.முருகானந்தம், திட்டச் செயலாளர் எஸ்.குமார், பொருளாளர் எஸ்.பழனி உள்ளிட்டோர் பேசினர். சென்னை தெற்கு-2 சென்னை தெற்கு-2  சார்பில் தாம்பரம் செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்திற்கு கிளைத் தலை வர் பி.டில்லிகுமார் தலைமை தாங்கினார். மாநில துணை ப்பொதுச் செயலாளர் ஆர்.ரவிக்குமார், துணைத் தலைவர் இ.விஜயலட்சுமி, பொறியாளர் அமைப்பின் மாநிலப் பொருளாளர் கே.ஆதன் இளங்கீரன், மத்திய அமைப்பின் கிளைச் செயலாளர் எம்.ஹெலன் தேவகிருபை, பொரு ளாளர் என்.பிரபுதேவா உள்ளிட்டோர் பேசினர். மத்தியசென்னை வள்ளுவர் கோட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியசென்னை திட்டத் தலைவர் வி.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் எம்.தயாளன், மாநிலச் செய லாளர் எஸ்.கண்ணன், கிளைச் செயலாளர் கே.பரந் தாமன், பொருளாளர் என்.கௌரி உள்ளிட்டோர் பேசினர்.