tamilnadu

img

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு

சென்னை, செப்.10- தமிழ்நாடு மின்வாரியத்தின் கோரிக்கை யை ஏற்று மின் கட்டண உயர்வுக்கு தமிழ்  நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.   இந்த கட்டண உயர்வு சனிக்கிழமை (செப்.10) முதல் அமலுக்கு வந்துள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. 2026-27ஆம் ஆண்டு வரை புதிய கட்டண உயர்வு அம லில் இருக்கும் என வாரியம் விடுத்துள்ள  செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.  இந்த அறிவிப்பை அடுத்து 8 ஆண்டு களுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் முதல் 100 யூனிட் இல வச மின்சாரம் அமலில் இருக்கும். 100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாம் என நினைப்ப வர்கள் விட்டுக்கொடுக்கலாம் எனவும் அறி விக்கப்பட்டுள்ளது.

கட்டண உயர்வு எவ்வளவு?

2 மாதங்களுக்கு 101 முதல் 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 55 ரூபாயும், இரண்டு மாதங்கள் 300 யூனிட் டுகள் வரையிலான பயன்பாட்டுக்கு 155  ரூபாயும், 400 யூனிட்கள் வரை இரண்டு  மாதங்களுக்கு 295 ரூபாயும் உயர்த்தப் பட்டுள்ளது. மொத்தம் 500 யூனிட்கள் வரை  பயன்படுத்தினால் இரண்டு மாதங்களுக்கு ரூ.595 கூடுதலாகச் செலுத்த வேண்டும். 500 முதல் 600 யூனிட்கள் வரை மின்சா ரம் பயன்படுத்துவோருக்கு இரண்டு மாதங்  களுக்கு 310 ரூபாயும், 700 யூனிட்கள் வரை  பயன்படுத்துவோருக்கு இரண்டு மாதங்க ளுக்கு 550 ரூபாயும், 800 யூனிட்கள் வரை  பயன்படுத்துவோருக்கு இரண்டு மாதங்க ளுக்கு 790 ரூபாயும், 900 யூனிட்கள் வரை  பயன்படுத்துவோருக்கு இரண்டு மாதங்க ளுக்கு 1,130 ரூபாயும் உயர்த்தப்பட்டுள் ளது.

மின் கட்டண உயர்வு  இனி ஒரே மின் கட்டணம்

வீட்டு பயன்பாட்டுக்கான மின்சாரத்தில் 500 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் மொத்தம் ரூ.1,130 வசூலிக்கப்பட்டது. 500  யூனிட்டில் இருந்து 501 ஆக அதிகரிக்கும்  போது மின் கட்டணத் தொகையானது ரூ. 1,786 ஆக வசூலிக்கப்பட்டது. ஆனால் இனி மேல் 500 யூனிட்களுக்கு மேல் ஒரு யூனிட் கூடுதலாகப் பயன்படுத்தினாலும் அதே விலையில்தான் கணக்கீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் எதிர்ப்பு

மின் கட்டண உயர்வை மாநில அரசு  தவிர்க்கவேண்டும் என்று மின்சார ஒழுங்கு முறை ஆணையம் சென்னையில் நடத்திய  கருத்துகேட்பு கூட்டத்தில் அனைத்து தரப்பி னரும் வலியுறுத்தினர். மின்சார வாரிய நட்டத்திற்கு பொதுமக்கள் பொறுப்பல்ல. வாரியத்தின் செயல்பாடுகளும் கடந்த கால  அரசாங்கங்களின் பொறுப்பற்ற நிர்வா கத் தன்மையும் தனியாரிடமிருந்து கூடுதல்  கட்டணத்தில் மின்சாரத்தை வாங்கிய துமே காரணம். மேலும் சொந்த மின் உற்  பத்திக்கு ஏற்பாடு செய்யவில்லை. எனவே  இந்த சுமையை பொது மக்கள், வியாபாரி கள், சிறுகுறு நடுத்தர தொழில்முனைவோர் தலையில் சுமத்துவது சரியல்ல என்று பல்வேறு தரப்பினர் கூறியபோதும் அதை  ஒழுங்குமுறை ஆணையம் கருத்தில் கொள்ளாமல் மின்வாரியத்தின் கோரிக்கை யை ஏற்றுக்கொண்டுள்ளது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடையச் செய் துள்ளது.

 

 

;