tamilnadu

img

பட்டா நிலத்தில் அனுமதி இன்றி மின் கம்பத்தை நட்ட மின் வாரியம்!

பட்டா நிலத்தில் அனுமதி இன்றி 
மின் கம்பத்தை நட்ட மின் வாரியம்!

கிருஷ்ணகிரி,ஏப்.22- சூளகிரி வட்டம் மாரண்டபள்ளி ஊராட்சி தொட்டூர் கிராமத்தில் உள்ள சுரேஷின் மனைவி கவிதாவின் பெயரில் பட்டா எண்  1189 இல் 25 சென்ட் நிலம் சாலை ஓரம் உள்ளது. ஓராண்டுக்கு முன்பு இந்த பட்டா நிலத்தின் அருகில் சாலையோரம் இருந்த மின்கம்ப த்தை நகர்த்தி கவிதா குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் அவர்களின் அனு மதியும் பெறாமல், மின்வாரிய அதிகாரிகள் பட்டா நிலத்தில் நட்டு சென்று விட்டனர். இதுகுறித்து உடனடியாக மின்வாரிய அலுவலகத்தில் கேட்டபோது தவறு தலாக நடந்துவிட்டது மாற்றி நட்டு விடுகி றோம் என்று கூறினர். அதன் பிறகும் தொடர்ந்து ஓர் ஆண்டாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கிருஷ்ணகிரி ராயக் கோட்டை சாலையில் உள்ள மின்வாரிய அலு வலகத்திலும்,சூளகிரி,சென்னபள்ளி அரு கில் உள்ள சின்னாறு அலுவலகத்திலும் புகார் அளித்தும்,தவறாக நடப்பட்ட மின் கம்பத்தை மாற்றவில்லை. 6 மாதங்கருக்கு முன்பு கவிதா வீடு கட்ட ஆரம்பித்த போது மின்சார அலுவல கத்தில் கேட்டதற்கு கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்ற கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியதால் வேறு வழி இல்லாமல் 14.11.2024 அன்று ரூ. 2145 கட்டி யுள்ளனர். அதன் பிறகும் எந்த நட வடிக்கையும் எடுக்காததால் மாவட்ட ஆட்சி யரிடம் கடந்த டிசம்பர் மாதம் இது குறித்து புகார் மனு அளித்துள்ளனர். அதன் பிறகு மின்வாரிய அலுவல கத்தை அணுகியபோது தேதி கடந்து விட்டது மீண்டும் மாற்றுவதற்கான கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர், மீண்டும் 5.2.2025 அன்று ரூ.2145 கட்டியுள்ளனர்.அதன் பிறகு சிபிஎம் மாநில குழு உறுப்பினர் பி.டில்லி பாபு நேரில் சென்று கிருஷ்ணகிரி மாவட்ட மின்வாரிய அலுவலகத்தில் இது குறித்து பேசிய போது உடனடியாக மாற்றி விடு கிறோம் என்று கூறினர். அதன்பிறகும் இழுத்த டித்ததால் பாதிக்கப்பட்ட கவிதா,மாதர் சங்க மாவட்டத் தலைவர் சரஸ்வதி சென்று  கேட்டபோது பணம் ரூ.46ஆயிரம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.தற்போது இந்த பட்டா நிலத்தில் வீடு கட்டிக்கொண்டி ருக்கும் நிலையில் முதல் தளம் கட்டு வதற்கு மின் கம்பிகள் கடும் இடையூறாக உள்ளது. இது குறித்தும் மின்வாரியத்தில் புகார்  அளித்தும் கண்டுகொள்ளாததால் செவ்வா யன்று மாதர் சங்க மாவட்ட தலைவர் சரஸ்வதி,கிளைச் செயலாளரும் பாதிக் கப்பட்ட வருமான கவிதா ஆகியோர் தலை மையில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி மற்றும் மாதர் சங்கத்தினர் கிராம மக்களுடன் சம்பந் தப்பட்ட மின் கம்பத்தில் கருப்பு கொடி, மாதர் சங்க கொடிகளை கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். மின் கம்பத்தை மாற்ற உடன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விரை வில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகை யிட்டு மாதர் சங்கம் சார்பில் மறியல் போரா ட்டமும் நடத்தப்படும் எனவும் கூறினர்.