சென்னை,செப்.9- சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஆதிதிராவிடர் நலத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளில் பழுது பராமரிப்பு பணிகளுக்காக கடந்த காலங் களில் ஆண்டுதோறும் ரூ. 6 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த அரசு பொறுப்பேற்றவுடன் 2021-22 ஆம் ஆண்டு திருத்திய வரவு-செலவு திட்டத்தில் சிறப்பு பராமரிப்பு பணிக்கு கூடுதல் நிதி ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டு வழக்கமான நிதி ரூ.10 கோடியும் சேர்த்து ரூ.35 கோடி மதிப்பீட்டில் விடுதிகளில் பரா மரிப்பு பணிகள் செய்யப் பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, 2024-25 ஆம் ஆண்டில் பழுது பராமரிப்பு பணிகள் தேவைப் படும் அனைத்து விடுதி களுக்கும் சிறப்பு பராமரிப்பு பணிகளுக்காக ரூ.100 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு 520 விடுதி கள் தேர்வு செய்யப்பட்டு பணி கள் தாட்கோ மூலம் துவங்கப்பட உள்ளது. இதில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மயி லாப்பூர் மாணவர் விடுதிக்கு ரூ.19 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவை தவிர தனியார் விடுதி களுக்கு இணையாக அனைத்து வசதிகளுடன் கூடிய முன்மாதி ரியாக ரூ.44.50 கோடியில் சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி, ரூ.100 கோடியில் மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் கட்டுமானப் பணிகள் நடை பெற்று வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனி சாமியின் அறிக்கையானது அடிப்படை ஆதாரங்கள் இல்லா தவை, திசை திருப்பும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.