tamilnadu

img

சலையோர சிறுகடைகளை அப்புறப்படுத்தக் கூடாது

புதுச்சேரி, மே 17-சாலையோர சிறுகடைகளை அப்புறப் படுத்தும் நடவடிக்கையை புதுச்சேரி நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என்று சிஐடியு மாநாடு வலியுறுத்தியுள்ளது.புதுச்சேரி சாலையோர சிறுகடை வியாபாரிகள் சங்கத்தின் (சிஐடியு) மாநாட்டிற்கு பிரதேசத் தலைவர் டி.எஸ்.மூர்த்தி தலைமை தாங்கினார். ஆட்டோ சங்க கவுரவத் தலைவர் தா.முருகன் துவக்கி வைத்தார். சிஐடியு தமிழ் மாநிலச் செயலாளர் பி.கருப்பையன் சிறப்புரையாற்றினார்.சிபிஎம் பிரதேசச் செயலாளர் ராஜாங்கம், சிஐடியு பிரதேசத் தலைவர் கே.முருகன், செயலாளர் சீனுவாசன், இணைச் செயலாளர்கள் மதிவாணன்,பிரபுராஜ், சங்கச் செயலாளர் அழகர்ராஜ் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.

தீர்மானங்கள்

வேலையின்மை, சமூக குற்றங்களுக்கு தீர்வ காண்பதற்கு மாறாக சாலையோர மற் றும் சிறுகடை வியாபாரிகளை தொடர்ந்து காவல்துறை மூலம் துன்புறுத்தி மிரட்டி வருவதை இம்மாநாடு கண்டிக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவையில் இயற்றப் பட்ட சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட் டத்தை உடனடியாக புதுச்சேரியில் அமல்ப டுத்தி, புதுச்சேரி சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். புதுச்சேரி நகராட்சி நிர்வாகம் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். கடந்த 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக் கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர் நலச் சங்கத்தை நலவாரியமாக மாற்றி ரூ.20 கோடி நிதி ஒதுக்கி, தீபாவளி பண்டிகை கால உதவித் தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.அமைப்பு சாரா தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும், விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக வழங்காமல் உள்ள உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.