சென்னை, ஆக. 14- புதுதில்லியில் உள்ள தேசிய அளவிலான கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்படும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளைக் கண்டறிந்து விருது வழங்கி வருகிறது.
அதனடிப்படையில், 2022-23-ஆம் பருவத்தில் தேசிய அளவில் ஒட்டுமொத்த செயல்திறனுக்கான சிறந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை யாக தருமபுரி மாவட்டம், கோபால புரத்தில் செயல்படும் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசைப் பெற்றுள்ளது.
மேலும், தேசிய அளவில் சிறந்த நிதி மேலாண்மைக்குரிய முதல் பரிசை கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராபாளையத்தில் செயல்படும் கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க் கரை ஆலை பெற்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
இந்நிலையில், சர்க்கரை ஆலை களுக்கு கிடைத்த இந்த விருது களை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் காண்பித்து, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வாழ்த்துப் பெற்றார்.
தமிழக சர்க்கரை ஆலைகளின் இந்த சாதனைக்கு முதல்வர் தமது பாராட்டைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது, தலை மைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலா ளர் அபூர்வா, சர்க்கரைத்துறை இயக்குநர் த. அன்பழகன், சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.