tamilnadu

img

எல்.ஐ.சி கிளைத் தலைவர் ஜெயக்குமார் தலைமையில்  ஆர்ப்பாட்டம்

எல்.ஐ.சி. பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிட வழிவகுக்கும்  மசோதாவை திரும்பப் பெறக் கோரி முகவர்கள் சங்கம் (லிகாய்) சார்பில்  ராணிப்பேட்டையில் கிளைத் தலைவர் ஜெயக்குமார் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கவுரவத் தலைவர் கே.ரவிக்குமார், வேலூர் கோட்ட பொதுச் செயலாளர் தா.வெங்கடேசன், பொருளாளர் பி.ஏழுமலை,  துணைத் தலைவர் எஸ்.லோகநாதன், என்.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழுப்புரம் எல்.ஐ.சி கிளை அலுவலகம் முன்பு தலைவர் எல்.கமலக்கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ரமேஷ், மாநிலக் குழு உறுப்பி னர் எஸ்.சம்பத், செயலாளர் எல்.டி.புண்ணியமூர்த்தி, துணைத் தலைவர் ஆர்.குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஓசூர் எல்ஐசி அலுவலகம் முன்பு  கோட்டத் தலைவர் முருகன் நாயினார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் சிஐடியு மாவட்டச் செயலாள் ஸ்ரீதர், கட்டுமான சங்க துணைச் செயலாளர் பிஜி.மூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர்  நடராஜன், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜெயராமன், தலைவர் சந்திரன்,  சத்துதுணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் தேவராஜ் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.