tamilnadu

விதை நெல் இருப்பு தேவை குறைகேட்புக் கூட்டத்தில் கோரிக்கை

விதை நெல் இருப்பு தேவை குறைகேட்புக் கூட்டத்தில் கோரிக்கை

விழுப்புரம், செப்.10- விழுப்புரம் வட்டத்தில் உள்ள அனைத்து தொடக்கள வேளாண்மை சங்கங்களிலும் விதை நெல் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றும் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் செவ்வாயன்று (செப்.9) கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில், விவசாயிகள் தென்பெண்ணை ஆறு மற்றும் பம்பை ஆற்றில் புயலின்போது உடைந்த கரைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்,  வி.மாத்தடுப்பணையில் இருந்து செல்லும் வரத்து வாய்க்காலை சீரமைக்க வேண்டும். எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் இருந்து வரும் ஆழங்கால், கண்டம்பாக்கம், மரகதபுரம் வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும். தளவானூர் அணைக்கட்டு பகுதியில் உடைந்த கரை இதுவரை சீரமைக்காமல் உள்ளது. இதனால், தென் பெண்ணை ஆற்றில் வெள்ளம் வந்தால், கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் உடைப்பை சீரமைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும், விழுப்புரம் மருதூர் மற்றும் பொன்னேரிகளில் சாராய ஆலை மற்றும் வர்த்தகநிறுவனங்களின்  கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விதை நெல் தட்டுப்பாடின்றி இருப்பு வைத்து வழங்க வேண்டும், முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்காமல் உள்ளதை விரைந்து வழங்கவேண்டும். சம்பா பயிர்களுக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு விரைந்து காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து பேசிய கோட்டாட்சியர் முருகேசன், விவசாயிகளின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் கூட்டத்தில் அனைத்துறை அதிகாரிகள் மற்றும் விழுப்புரம், விக்கிரவாண்டி, கண்டாச்சிபுரம், திருவெண்ணெய்நல்லுார், வானுார் வட்டங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.