tamilnadu

img

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு  

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து மீண்டும் குறைய தொடங்கிய நிலையில் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்து வருகிறது.  அந்த வகையில் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திடவும், குறைத்திடவும் கூடுதல் தளர்வுகளுடன் மார்ச் 2 வரை ஊரடங்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை தொடரும். திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும். இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.

நர்சரி பள்ளிகள் (LKG, UKG) மற்றும் மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் திறக்க அனுமதியளிக்கப்படுகிறது. பொருட்காட்சிகள் நடத்த அனுமதி. 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி. உணவகங்கள் 100 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதியளிக்கப்படுகிறது. 

மேலும் மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடித்து மற்றும் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  

கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.