tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

சிறுமி பாலியல் வல்லுறவு: சிபிஎம் கண்டனம்

கிருஷ்ணகிரி, ஆக.20- கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை (என்.சி.சி) என்று போலி முகாம் நடத்திய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிவா என்கிற சிவராமன், 13 வயது மாணவியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்துள்ளார். இதையடுத்து சிவராமன், பள்ளியின் தாளாளர், முதல்வர் உட்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாலியல் வல்லுறவு செய்த சம்பவத்தை வன்மையாக கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கிருஷ்ணகிரி மாவட்டச் செய லாளர் ஜி.கே. நஞ்சுண்டன்  வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இறப்பு சான்றுக்கு ரூ.1,500 லஞ்சம்: தற்காலிக ஊழியர் கைது

கள்ளக்குறிச்சி, ஆக. 21- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எல்லப்பன் நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் தங்கமணி. அவரது மகன் ராம்குமார் 8 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது இறப்பு சான்றுக்காக, இணையதளத்தில் பதிவு செய்துள்ளார் தங்கமணி.

இந்த நிலையில் பதிவு செய்யப்பட்ட இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் சென்றுள்ளார். அங்கு தற்காலிக ஊழியராக பணிபுரிந்து சரஸ்வதி ரூ. 1,500 லஞ்சம் கேட்டுள்ளார். அதை கொடுக்க விரும்பாத தங்கமணி, லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு  புகார் அளித்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சரஸ்வதியிடம் தங்கமணி வழங்கினார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். பிறகு, அவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டை, ஆக. 20 - தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகம் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆக. 23 வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில் பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங் படித்தவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரவேண்டும்.மேலும் விவரங்களுக்கு 04172-291400 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. என இவ் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.