சென்னை, டிச. 19 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் பி.ஆர். அம்பேத் கர் குறித்து மாநிலங்களவை யில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ள கருத்துக்கள் அம்பேத்கர் மீதும், அரசியல் சாசன சட்டத்தின் மீதும் ஆர்.எஸ்.எஸ். பாஜகவிற்கு இருக்கும் ஆழ மான வெறுப்புணர்வின் வெளிப் பாடே ஆகும்.
தேர்தல் நோக்கங் களுக்காக அம்பேத்கர் பெயரை அவர்கள் உச்சரித்தாலும், அந்தப் பெயர் அவர்களுக்கு எரிச்சலையே ஏற்படுத்துகிறது என்பது தான் அமித் ஷா வழியாக வெளிப்பட்டுள்ளது. அரசியல் சாசன சட்டத்தின் 75ஆவது ஆண்டு குறித்து விவாதத்தின் போது அமித் ஷா குறிப்பிட்டது தற்செயலானது அல்ல பாஜகவின் மனுவாத கண்ணோட்டத்தை அம்பலப் படுத்தியுள்ளது.
அரசமைப்புச் சட்டமா? மனு தர்மமா? என்றால் மனு தர்மத்தின் பக்கமே நிற்கும் ஆர்.எஸ்.எஸ். தனது சேவகர் மூலமாக நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமரியாதை செய்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருக்கும் அமித் ஷா அரசியல் முதிர்ச்சியின்றி தன்னை ஆர்.எஸ்.எஸ்-ஸின் அடிமட்டத் தொண்டன் என்று நிரூபிக்கும் விதமாக அவரது உரை இருந்துள்ளது. எனவே, அமித் ஷா உள்துறை அமைச்சராக நீடிப்பதற்கு எள்முனை அளவும் தகுதி அற்றவர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.
பதவி விலகக் கோரி கண்டன முழக்கம்
டாக்டர் அம்பேத்கரை அவ தூறாகவும், அவமரியாதை யாகவும் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்தும், அவர் உடனடியாக பதவி விலகக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்களும், ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டு கண்டனக் குரலெழுப்பிட வேண்டுமென கட்சியின் மாநில செயற்குழு அறைகூவி அழைக்கிறது.
இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள் ளார்.
பதவியில் தொடர அமித் ஷாவுக்கு தகுதியில்லை
அரசியல் தலைமைக்குழு கண்டனம்
“அரசியலமைப்பின் 75-வது ஆண்டு விழா குறித்த மாநிலங்களவை விவாதத்தில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் குறித்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த இழிவான கருத்துக்கள், நாடு முழுவதும் உள்ள மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. டாக்டர் அம்பேத்கர் வடிவமைத்த இந்திய அரசியலமைப்பு பற்றி பேசும் போதே அமித் ஷா இத்தகைய கருத்துக்களை தெரிவித்தது, அவரது மனுவாத சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளது. அமித் ஷாவுக்கு பிரதமர் மோடி அளித்துள்ள ஆதரவு கண்டிக்கத்தக்கது. உள்துறை அமைச்சர் பதவியில் தொடர அமித் ஷாவுக்கு எந்த உரிமையும் இல்லை” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.