தமிழ்நாட்டில் சமீப காலமாக, இந்தப் பள்ளிக்கு வெடிகுண்டு வைத்திருக்கிறோம். இந்தப் பள்ளியில் வெடிகுண்டு வெடிக்கும்... என தொலைபேசி, மின்னஞ்சல், இமெயில் மூலம் மிரட்டல் வருவது வாடிக்கையாக மாறியுள்ளது.
வழக்கம் போல் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் தகவல் கிடைக்கிறது. அடுத்த கனமே, குழந்தைகள் அஞ்சி நடுங்கி, சிதறி ஓடுகின்றனர். தங்களது குழந்தை களை பத்திரமாக அழைத்துச் செல்ல பதறியடித்துக் கொண்டு ஓடோடி வரும் பெற்றோரின் அழுகைக் குரல் பார்ப்போரின் நெஞ்சங்களை ஒரு பக்கம் உறைய வைக்கிறது.
மறுபக்கத்தில், அங்குலம் அங்குல மாக ஒரு இடம் கூட பாக்கி இல்லாமல் சோதனை நடத்தியும் எதுவும் சிக்குவதில்லை. இது வெறும் புரளி என்று பின்னர் தெரிய வருகிறது.
இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் இன்றல்ல, நேற்று அல்ல. 15 ஆண்டு காலமாக அடங்கவில்லை.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவை வதந்திகளாக முடிவடைந்தா லும், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகள்
சென்னை
n மடிப்பாக்கம் செட்டிநாடு வித்யாசாரம் தனியார் பள்ளிக்கு ஒன்பது முறை மிரட்டல்
n செயின்ட் தாமஸ் மவுண்ட் ராணுவ பள்ளி
n மயிலாப்பூர், நீலாங்கரை பள்ளிகள்
n தி.நகர் தனியார் கல்வி நிறுவனம்
மற்ற நகரங்கள்
w மதுரை: நரிமேடு கேந்திர வித்யாலயா உள்பட 8 தனியார் பள்ளிகள்
w திருச்சி: 8 பள்ளிகள்
w கோவை: அவிநாசி சாலையில் உள்ள தனியார் பள்ளி
w ஈரோடு: பள்ளி புரத்தான் பாளையத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி மற்றும் சேலம்
பிற இலக்குகள்
பள்ளிகள் மட்டுமின்றி, பின்வரும் இடங்களும் மிரட்டல்களுக்கு உள்ளாகின்றன:
n மீனம்பாக்கம் விமான நிலையம்
n ஆவடி ரயில் நிலையம்
n கோயம்பேடு மார்க்கெட்
n ராயப்பேட்டை வணிக வளாகம்
n அரசு அலுவலகங்கள்
n தலைமைச் செயலகம்
குறிப்பிடத்தக்க சம்பவங்கள்
w டிஜிபி சங்கர் ஜிவால் பெயரிலேயே வந்த போலி மிரட்டல் கடிதம்
w சட்டம் - ஒழுங்கு டிஜிபி பெயரில் போலி இமெயில் மூலம் ராஜா அண்ணா மலைபுரம் தனியார் பள்ளிக்கு மிரட்டல்
காவல்துறையின் நடவடிக்கைகள்
n காவல்துறை, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உடனடி சோதனை
n சிசிடிவி காட்சிகள் ஆய்வு
n மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி அழைப்புகளின் மூலத்தை கண்டறிய முயற்சி
n பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்கள் என நீள்கின்றன.
கண்டுபிடிக்கப்பட்ட நபர்கள்
n ஈரோட்டில் வேறொரு பள்ளியில் இருந்து சேர்ந்த இரண்டு மாண வர்கள் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. மாணவர்களின் எதிர்கால நலனைக்கருதிய குற்றப்பிரிவு காவல்துறையினர், மாணவர் மற்றும் அவரது பெற்றோரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
n சென்னிமலை சாலையில் உள்ள ஒரு தனியார் இன்டர்நேஷனல் பள்ளிக்கு வந்த மிரட்டல், விளையாட்டாக இமெயில் அனுப்பியதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
n சென்னையில் இளைஞர் ஒருவரை கைது செய்த போலீசார், விசாரணை யோடு அனுப்பிவைத்து விட்டனர்.
சவால்கள்
w குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிரமங்கள்
w மிரட்டல்களின் மூலம், எது, நோக்கம் என்ன என்று கண்டறிவதில் சிக்கல்கள்
w கண்டுபிடிக்கப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் இன்மை
w வதந்தி பரப்புவது பெரிய குற்றமாக கருதப்படாமை
பாதிப்புகள்
n மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே தொடரும் பதற்றம், அச்சம்
n பள்ளிகளின் இயல்பு செயல்பாடுகள் பாதிப்பு
n வெளியூரில் இருக்கும் பெற்றோர் களுக்கு அதிக கவலை
என்ன தீர்வு?
w குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்
w வதந்தி பரப்புவதை கடுமையான குற்றமாக கருத வேண்டும்
w பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
w சட்ட நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும்
இத்தொடர் மிரட்டல்கள் சமூ கத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, இவற்றை முற்றி லும் ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் தேவை.