tamilnadu

img

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரிப்பு

சென்னை,அக்.4- பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே, மகளிர் கொள்கை அமலாக்கம் குறித்து அரசு  மாதர் அமைப்புகளுடன் மீண்டும் கலந்தாலோச னை நடத்த வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

‘சட்டத்தால் யுத்தம் செய்’ என்னும் தலைப்பில் வியாழனன்று (அக்.3) சென்னை யில் கருத்தரங்கம் நடைபெற்றது.மகளிர் சட்ட உதவி மன்றம் இந்நிகழ்வை நடத்தியது.

‘அமிலவீச்சு வன்முறையை அனுமதி யோம்’ எனும் உண்மை அறியும் குழுவின் அறிக்கை, ‘கல்வி நிலையங்களில் தொடரும் இயற்கைக்கு மாறான மரணங்கள் தடுப்பு மற்றும் எதிர்கொள்ளும் நடவடிக்கைகளும்’ எனும் கலந்துரையாடல் அறிக்கை ஆகியவற்றை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா வெளியிட்டார்.

கல்லூரிகளில் இருந்து தினசரி புகார்

இந்த அறிக்கைகளை பெற்றுக்கொண்டு தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ்.குமாரி பேசுகையில், “கல்லூரிகளில் இருந்து தினசரி பாலியல் புகார்கள் வருகின்றன. 6 மாதமாக கல்வி வளாகங்களில் புகார் கமிட்டி கள் அமைத்து வருகிறோம். பெண்களை பாது காக்கும் சட்டங்கள் உள்ளது என்று கூறினால், கல்லூரி மாணவிகளே ஆச்சரியமாக பார்க்கின்றனர். இந்த நிலை மாற பெண்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். வன்முறையை எதிர்த்து தைரியமாக புகார் தெரிவிக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் புகார் கமிட்டி அமைக்க வலியுறுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

சட்ட உருவாக்கத்தில்  பெண்களுக்கு பிரதிநிதித்துவம் 

உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துரு பேசுகையில், “பெண்களுக்கு சட்ட  உதவிகளை செய்வதோடு, எத்தகைய பாது காப்பு சட்டங்கள் கொண்டு வர வேண்டும், அந்த  சட்டங்களை எவ்வாறு, யார் உருவாக்க வேண்டும் என்று போராடுவதோடு, சட்டம் உரு வாக்கும் இடங்களில் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று  மாதர் சங்கம் வலியுறுத்துகிறது. நீதிபதிகள் நிய மனத்தில் பெண்களுக்கு உரிய பங்கை அளிக்க கோருகிறது.  ஆண் நீதிபதிகள் வழங்கிய 10 தீர்ப்பு நகல்களை பெண்களிடம் ஒரு பல் கலைக்கழகம் கொடுத்தது. இதில் 9 தீர்ப்புகளில் பெண்கள் மாறுபட்ட கருத்து தெரிவித்தனர். ஒரு பிரச்சனையை ஆண், பெண் அணுகுவதில் வேறுபாடு உள்ளது.பெண் நீதிபதிகள் இல்லாத நீதிமன்றமே கிடையாது. பெண்கள் இடம்பெறும்போது நீதிமன்றம் பன்முகத் தன்மை கொண்டதாக மாறுகிறது. எதிர் காலத்தில் அதிக பெண் நீதிபதிகளை நியமிக்க முயற்சிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே குறிப்பிட்டுள்ளார். நீதிபதிகளாக இருந்தாலும் ஆணாதிக்க மனோநிலை மாறா மல் உள்ளது. இதனால் வாய்ப்பு கிடைக்கும் போது, பெண் இனத்திற்கு விரோதமான கருத்துக் களை தெரிவிக்கின்றனர். நீதிபதிகளாவதற்கு முன்பே அவர்களுக்கு சரியான பாலின சமத்துவ புரிதல் ஏற்படவில்லை. எனவே, நீதிபதியா வதற்கு முன்பே உளவியல் ரீதியான சிந்தனை மாற்றத்தை உருவாக்க வேண்டும்” என்று கூறினார்.

வன்முறை அதிகரிப்பு

மாதர் சங்கத்தின் அகில இந்திய செயலா ளர் பி.சுகந்தி பேசுகையில், “தமிழ்நாடு அரசு பல்வேறு அமைப்புக்களுடன் கலந்தாலோச னை நடத்தி மாநில மகளிர் கொள்கையை வெளி யிட்டது. அதில் பெண்களின் பாதுகாப்பு குறித்த பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால், பெண்கள், குழந்தைகள் மீதான வன் முறை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே, மகளிர் கொள்கை அமலாக்கம் குறித்து அரசு மீண்டும் மாதர் அமைப்புகளோடு கலந்தாலோசனை நடத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செய லாளர் அ.ராதிகா பேசுகையில், கடந்த கால  போராட்டங்களை பட்டியலிட்டு, எதிர்காலத்தில் சட்ட உதவி மையத்தின் பணிகளை விரிவு படுத்துவோம் என்றார்.

இந்நிகழ்விற்கு சட்ட உதவி மையத்தின் தலைவர் வழக்கறிஞர் உ.நிர்மலா ராணி தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.மனோன்மணி வரவேற்க, பொருளாளர் வ. பிரமிளா நிகழ்வை ஒருங்கிணைத்தார். கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரிய இணை இயக்குநர் கே.கண்மணி, உறுப்பினர் எஸ்.கல்யாணந்தி, மாதர் சங்க நிர்வாகி மகாலஷ்மி உள்ளிட்டோர் பேசினர். இந்நிகழ்விற்கு சட்ட உதவி மையத்தின் தலைவர் வழக்கறிஞர் உ.நிர்மலா ராணி தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.மனோன்மணி வரவேற்க, பொருளாளர் வ. பிரமிளா நிகழ்வை ஒருங்கிணைத்தார். கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரிய இணை இயக்குநர் கே.கண்மணி, உறுப்பினர் எஸ்.கல்யாணந்தி, மாதர் சங்க நிர்வாகி மகாலஷ்மி உள்ளிட்டோர் பேசினர்.