தோழர் கே.மனோகரன் படத்திறப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட மூத்த தோழர் கே.மனோகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி திங்களன்று (மே 12) அவரது இல்லத்தில் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் (பொறுப்பு) எம்.செல்வம் தலைமையில், மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் கலந்து கொண்டு தோழர் மனோகரன் படத்தை திறந்து வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் என்.நம்புராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், வி.அரி கிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் கே.நேரு, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.குமார், குடிநீர் வடிகால் வாரிய சங்கத்தின் நிர்வாகி சத்தியநாராயணன் தோழர் எம்.மனோகரன் மனைவி சாந்தா, மகள் ஜோதி அவரது உறவினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தோழர் எம்.பாண்டியன் 4 ஆம் ஆண்டு நினைவு தினம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லாவரம் பகுதி முன்னணி ஊழியரும், சென்னை மற்றும் புறநகர் கட்டிட தொழிலாளர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளருமான தோழர் எம்.பாண்டியனின் 4வது ஆண்டு நினைவு தினம் செவ்வாயன்று (மே 13) அனுசரிக்கப்பட்டது. அவரது சிலைக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.தாமோதரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சி.பிரபாகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.