tamilnadu

img

தமிழர்கள் மீது இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?

சென்னை,  மே 21 - தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியன், ஒடிசா மாநில ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தள கட்சியின் முக்கிய பிரமுகராக இருக்கிறார். இதனால் பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசா பிரச்சாரங்களில் வி.கே. பாண்டியனையும் கடுமையாகச் சாடி வருகிறார். 

அந்த வகையில் தான், “பூரி ஜெகநாதர் கோவில் பொக்கிஷ அறைகளின் சாவியை 6 ஆண்டுகளாக காணவில்லை” எனவும் “அந்த சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது” என்று, தமிழரான வி.கே. பாண்டியனைக் குறிவைத்து அவதூறு பொழிந்துள்ளார். 

பூரி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஒடிசாவில் கனிம வளங்கள் ஏராளமாக இருந்த போதிலும் மக்கள் தொடர்ந்து வெளியே செல்லும் நிலை இருக்கிறது. ஒடிசாவின் நிலையைப் பார்த்து நான் வேதனைப்படுகிறேன். பிஜூ ஜன தளக் கட்சியின் சிறு நிர்வாகிகளும் தற்போது கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். பூரி ஜெகநாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி காணாமல் போய்விட்டது. நமது வீட்டு சாவி காணாமல் போனால் ஜெகன்நாதரிடம் முறையிடலாம். ஆனால் ஜெகநாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவியே காணாமல் போய்விட்டது. அந்தச் சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்” என பேசியுள்ளார்.

அதாவது, வி.கே. பாண்டியன் ஒடிசாவின் சொத்துக்களை திருடி, தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டிற்கு கொண்டு சென்று விட்டார் என்று, திருட்டுப் பட்டம் கட்டியுள்ளார். மற்றொரு வகையில், ஓட்டுக்காக ஒடிசா - தமிழ்நாடு ஆகிய இரு மாநில மக்களிடையே உச்சபட்ச மோதல்- வெறுப்பையும் தூண்டி விட்டுள்ளார்.

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், “தமிழர்களை திருடர்கள்  என கூறும் அளவுக்கு பிரதமருக்கு ஏன் இவ்வளவு வன்மம்?” என தமிழ்நாடு முத லமைச்சர் மு.க. ஸ்டாலினும் தனது வன்மை யான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்ப தாவது:

“தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்பு களை மீறாமல், கொள்கை - கோட்பாடுகள் - செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வெறுப்புப் பேச்சுகளின் மூலம் மக்களிடையே பகை உணர்வையும் - மாநி லங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டுக்கு நல்லதல்ல!

முன்னதாக, உத்தரப் பிரதேச மக்களை இழித்தும் பழித்தும் தென்னிந்தியர்கள் பேசுவதாகத் தமிழ்நாட்டு மக்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி இருந்தார். மதம், மொழி, இனம் மற்றும் மாநிலத்தின் பெயரால், இன்னொரு தரப்பு மக்களைத் தூண்டிவிடும் செயல் ஆபத்தானது என்று எனது கண்டனத்தை அப்போதே தெரிவித்து இருந்தேன். சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டிய அரசியல் தலைவரே பகையுணர்வைத் தூண்டுவது தவறு என்றும் கூறியிருந்தேன். ஆனாலும் தமிழ்நாட்டு மக்களை மோசமானவர்களாக இழித்தும் பழித்தும் பேசும் வழக்கத்தைப் பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ளவில்லை.

ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரை யில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்து போன சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகப் பேசி இருக் கிறார். இது, கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் பூரி ஜெகந்நாதரை அவமதிப்பதோடு, ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும் நேசமும் கொண்ட தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவது மாகும்.

ஜெகந்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிசா மக்களைத் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது? ஆலயத்தின் பொக்கிஷத்தைக் கள வாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்த லாமா? தமிழ்நாட்டு மக்களை நேர்மை யற்றவர்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா? தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?

தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவ தாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற  அறிவாளிகள் இல்லை என்று பாராட்டு வதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு  சேகரிக்கும்போது தமிழ்நாட்டு மக்க ளைத் திருடர்களைப் போலவும், வெறுப்பு  மிகுந்தவர்களாகவும் அந்த மாநிலங் களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்!

வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும்!”

இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள் ளார்.

;