tamilnadu

எழும்பூர் ரயில் நிலையத்தில் மூடப்பட்ட 3,4 நடைபாதைகள் ஓரிரு நாளில் திறப்பு மன்னை செந்தூர் விரைவு ரயில்கள் மீண்டும் இயக்கப்படும்

எழும்பூர் ரயில் நிலையத்தில் மூடப்பட்ட  3,4 நடைபாதைகள்  ஓரிரு நாளில் திறப்பு  மன்னை செந்தூர் விரைவு ரயில்கள் மீண்டும்  இயக்கப்படும்

சென்னை, ஆக. 21-  எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் மறு சீரமைப்பு பணி காரண​மாக மூடப்​பட்டி ருந்த 3, 4-வது நடைமேடைகள் ஓரிரு நாளில் திறக்​கப்பட உள்​ளன.  இதையடுத்​து, மன்​னை, செந்​தூர் விரைவு ரயில்​கள் மீண்​டும் எழும்​பூரில் இருந்து இயக்​கப்பட உள்​ளன. சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் ரூ.734.91 கோடியில் மறுசீரமைப்பு பணி நடந்து வருகிறது. இங்கு பன்​னடுக்கு வாகன நிறுத்​து​மிடம், வணிக வளாகம் அமைப்​பது உட்பட பல்​வேறு பணி​கள் நடை​பெறுகின்​றன. இதுத​விர, 1 முதல் 11-வது நடைமேடை வரை இணைப்பு நடைமேம்​பாலம் அமைக்​கும் பணி​களும் தொடங்​கின. இதையொட்​டி, முதல்​கட்​ட​மாக, கடந்த ஜூன் முதல் வாரத்​தில் 1, 2-வது நடைமேடைகளும், பின்​னர் 3, 4-வது நடைமேடைகளும் மூடப்​பட்​டன. இதனால், எழும்​பூரில் இருந்து மன்​னார்​குடி செல்​லும் மன்னை விரைவு ரயில், திருச்​செந்​தூர் செல்​லும் செந்​தூர் விரைவு ரயில் உட்பட 6 ரயில்​கள் தாம்​பரம் நிலையத்​துக்கு மாற்றப்பட்டன. எழும்​பூர் - புதுச்​சேரி விரைவு ரயில் உள்​ளிட்ட சில ரயில்​கள் கடற்​கரை நிலை​யத்திற்கு மாற்​றப்​பட்​டன. இந்த நிலை​யில், அடித்​தளப் பணி​கள் முடிந்​து, 1, 2-வது நடைமேடைகள் கடந்த 4-ம் தேதி திறக்​கப்​பட்​டன. இதையடுத்​து, தேஜஸ் மற்​றும் புதுச்​சேரி விரைவு ரயில் ஆகியவை எழும்​பூரில் இருந்து மீண்​டும் இயங்​கத் தொடங்​கின. இதற்​கிடையே, 3, 4-வது நடைமேடைகளில் நடந்​து​வந்த பணி​ கள் சமீபத்​தில் முடிவடைந்​த​தால், அந்த 2 நடைமேடைகளும் ஓரிரு நாளில்  திறக்கப்பட உள்​ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறிய​போது, “எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் 3, 4-வது நடைமேடை​யில் பணி​கள் முடிந்​து​விட்​ட​தால், 2 நடை மேடைகளும் ஓரிரு நாளில் திறக்​கப்​பட்​டு, மன்​னை, செந்​தூர் ஆகிய விரைவு ரயில்​கள் மீண்​டும் எழும்​பூரில் இருந்து இயங்​கத் தொடங்​கும்” என்றனர்.