tamilnadu

காவல்துறையினரின் நடவடிக்கைக்கு கண்டனம்

சென்னை, ஜூலை 23- டாஸ்மாக் ஊழியர்கள் மீது பொய்  வழக்கு பதிவு செய்யும் காவல்துறை யினருக்கு கண்டனத்தை தெரிவித்  துள்ள சிஐடியு டாஸ்மாக் ஊழியர்  மாநில சம்மேளனம், இப்பிரச்ச னையில் முதலமைச்சர் தலையிட்டு, வழக்குகளை திரும்பப்பெற நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்  மாநில சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் மதுபான விற்ப னையை மொத்தமாகவும், சில்லரை யாகவும் செய்யும் தனித்த உரிமம் பெற்ற நிறுவனமான டாஸ்மாக் மாநி லம் முழுவதும் 4829 மதுபான சில்லரை விற்பனை கடைகளை நடத்தி வருகிறது. இக்கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மது அருந்  தும் வசதியை டாஸ்மாக் நிர்வாகமே  தனியார் உரிமம் மூலம் மதுக்கூடங் களை நடத்தி வருகிறது. இதில்  1910  மதுக்கூடங்கள் உரிமம் பெற வில்லை. உரிமம் பெறாமலேயே சட்ட விரோதமாக மதுக்கூடங்களும் செயல்படுகின்றன. மேலும் மதுக் கூடம் உரிமம் இல்லாத  டாஸ்மாக் கடைகளுக்கு அருகில்  பெட்டிக் கடை களில் தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர், மற்றும் திண்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.  

டாஸ்மாக் கடையின் விற்பனை நேரத்திற்கு பிறகு உரிமம் பெற்ற மதுக்  கூடங்கள், உரிமம் பெறாத சட்ட விரோத மதுக்கூடங்கள் மற்றும் பெட்டிக் கடைகளில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுகின்றன. இவை தவிர சந்து கடைகள் என்ற பெயரில் கிராமப்புறங்களில் மது பாட்டில்களை பதுக்கிவைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படு கின்றன. இத்தகைய சட்டவிரோத மது  விற்பனை  டாஸ்மாக் அதிகாரிகள், மதுவிலக்கு காவல் பிரிவினர் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் உள்  ளிட்ட அரசு அதிகாரிகளின் துணை யுடன் நடத்தப்படுகிறது.

கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் அருந்தி 60க்கும் மேற்  பட்ட அப்பாவி பொது மக்கள் பலி யான சம்பவத்திற்கு பிறகு காவல் துறையினர் சோதனைகளை தீவி ரப்படுத்தியுள்ளனர். இந்த சோதனை களின் போது மதுபாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்யும் நபர்  களை கைது செய்து வருகின்றனர், இந்த நபர்களிடம் பெறப்படும் வாக்கு மூலத்தில்  குறிப்பிடும் டாஸ்மாக் கடை களில் பணிபுரியும் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகின்றன. அரசு  மதுபான உற்பத்தி நிறுவனங்க ளிலிருந்து கொள்முதல் செய்யப் படும் மதுபாட்டில்கள் தான் விற் பனை செய்யப்படுகின்றன. டாஸ்  மாக் கடைகளில் போலி மற்றும் கலப்பட மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதில்லை. டாஸ்மாக் கடைக்கு வரும் நபர்கள் ஓரிரண்டு பாட்டில்கள் வாங்கிச்செல்கின்றனர்,  அவர்கள் வாங்கி செல்லும் மது பாட்டில்களை அவர்களது சொந்த  பயன்பாட்டிற்கு வாங்குகின்றனரா? அல்லது கள்ளச்சந்தையில் விற் பனை செய்ய வாங்குகின்றனரா? என்பதை கடை ஊழியர்களால் கண்காணிக்க முடியாது. டாஸ்மாக் நிர்வாகமும் ஒருநபருக்கு இத்தனை பாட்டில்கள் தான் விற்பனை செய்ய  வேண்டும் என்று எந்தவித உத்தர வையும் பிறப்பிக்கவில்லை,

இந்த நிலையில் காவல்துறை யினர் சட்டவிரோதமாக மது விற் பனை செய்பவர்களோடு, கடை ஊழி யர்களையும் வழக்கில் சேர்த்து குற்ற வாளிகளாக மாற்றும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

கடந்த ஒரு மாத காலத்தில்  தேனி, சிவகங்கை, கோயமுத்தூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்க ளில் இதுபோன்ற சம்பவங்களில் கடை ஊழியர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் டாஸ்மாக் நிர்வாகம் தனது ஊழியர்களை பாதுகாக்க எந்தவிதமான அக்கறையும் செலுத்தாமல் உள்ளது.முதலமைச்சர் இப்பிரச்சனை யில் நேரடியாக தலையீடு செய்து  தவறு செய்யாத டாஸ்மாக் ஊழி யர்கள் மீது பதியப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப்பெறவும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற வழக்குகளிலிருந்து டாஸ்மாக் ஊழி யர்களை பாதுகாக்கவும் உரிய நட வடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.