சிஐடியு பொன்விழா ஆண்டு நினைவு கல்வெட்டு திறப்பு விழா செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள துணை மின் நிலையத்தில் கோட்டச் செயலாளர் எம்.மயில்வாகனன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பொன்விழா ஆண்டு கல்வெட்டை மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் திறந்துவைத்தார். சங்கத்தின் கொடியை சென்னை தெற்கு மண்டல செயலாளர் ஏ.பழனி ஏற்றி வைத்தார். செங்கல்பட்டு மின் திட்டத் தலைவர் முனிவேல், செயலாளர் பால்ராஜ், பொருளாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினார்.