tamilnadu

img

மக்களை பாதுகாக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது

மக்களை பாதுகாக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. மிக்ஜம் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் மீட்புக் குழுக்கள் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மைத் துறை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.  அப்போது புயலை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரனுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.