tamilnadu

img

உளுந்தூர்பேட்டையில் சாதி வெறித்தாக்குதல்!

உளுந்தூர்பேட்டையில் சாதி வெறித்தாக்குதல்!

கள்ளக்குறிச்சி, ஜூன் 17 -  கள்ளக்குறிச்சி மாவட்  டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் நாராயணன் மீது சாதிய ஆதிக்க குணம் கொண்ட புஷ்பராஜ் தலைமையிலான கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. உளுந்தூர்பேட்டையில் கடையில் வேலை செய்யும் நாராயணன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்  கொண்டிருந்த போது, உளுந்தாண்டார் கோவில் பகுதியைச் சார்ந்த புஷ்ப ராஜ் அவரது வாகனத்தின் மீது மோதி தகறாரில் ஈடுபட்டார். பிரச்சனை வேண்டாமென்று அந்த இடத்தை விட்டு விலகிச் சென்ற நாராயணனை உளுந்தாண்டார் கோவில் சுடுகாடு அருகே மீண்டும் வழிமறித்த புஷ்பராஜ் தலைமையிலான சுமார் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கூட்டமாக சாதிய ஆதிக்க வெறியுடன் நாரா யணனை சாதிப் பெயர் சொல்லி திட்டி, கடுமை யாக தாக்கினர். இதில் நாராயணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாதிக்கப்பட்ட நாராய ணனை தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத்தலைவர் ஜி.ஆனந்தன், சிபிஐஎம் மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாற்றுத்திற னாளிகள் சங்க மாவட்ட செயலாளர் எம்.ஆறுமுகம், திருநாவலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ. ஜெயக்குமார், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ராஜீவ் காந்தி, மாவட்டக் குழு உறுப்பினர் பி.சேகர், விதொச ஒன்றிய தலைவர் ராஜீவ் காந்தி ஆகியோர் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினர். குற்றவாளிகள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் குற்றவாளிகளைக் கைது செய்வதில் காவல்  துறை மெத்தனம் காட்டு வதைக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஐஎம் சார்பில் ஆர்ப்பாட் டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.