tamilnadu

img

திருவள்ளூர் பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

தேர்தல் பிரச்சாரத்தில் தேசியக் கொடியை பயன்படுத்திய பாஜக வேட்பாளர் பாலகணபதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அடுத்த மெய்யூர் கிராமத்தில், தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசியக் கொடியை பயன்படுத்திய பாஜக வேட்பாளர் பாலகணபதி உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேளகாபுரம் வருவாய் ஆய்வாளர் பாலாஜி அளித்த புகாரின் பேரில் பாலகணபதி, கட்சியின் மாவட்ட தலைவர் சீனிவாசன், ஒன்றிய தலைவர் சாந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.