சென்னை, மே 13- பேரறிஞர் அண்ணா, முத்துராமலிங்க தேவர் பற்றி பொய்யான கருத்துக்களை பேசிப் பதற்றத்தை ஏற் படுத்த முயன்றதாக, அண் ணாமலை மீது சேலத்தை சேர்ந்த பியூஷ் மானுஷ் புகார் அளித்திருந்தார்.
கடந்த ஆண்டு செப்டம்ப ரில் அளிக்கப்பட்ட இந்த புகா ரின் பேரில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணா மலை மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக ஆளுநரிடம் சேலம் மாவட்ட ஆட்சியர் அனுமதி கோரி இருந்ததாக வும், அதன் பேரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தமிழக அரசின் (பொது மற்றும் சட்டம் ஒழுங்கு) துறைச் செயலாளர் கே. நந்த குமார் வெளியிட்ட தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பாக வெளியாகியிருந்த செய்திக் குறிப் பில், பதற்றத்தை உருவாக்குதல், பொய்ச் செய்தி பரப்பு தல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில், “அண்ணாமலைக்கு எதிரான கிரி மினல் வழக்கு குறித்து எந்த தகவலும் வரவில்லை. மேலும், வழக்குப் பதிவுக்கு அனுமதி தர ஆளுநர் மாளிகை உத்த ரவு எதுவும் பிறப்பிக்கவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளது.