சிந்தனைச் சிதறல்
இதழியல் பணி ஒருவருக்கு எண்ணற்ற வாசல்களைத் திறக்கிறது; வாய்ப்புகளை யும் வழங்குகிறது. அதற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறார் தி.வரதராசன். தீக்கதிர் நாளிதழில் கார்ட்டூனிஸ்ட்டாக பத்திரிகை வாழ்வைத் துவக்கியவர் செம்மலர் இலக்கிய இதழில் துணையாசிரிய ராகவும் ஆனார்.
கருத்துப்படங் களையும் கதைப் படங்களையும் வரைந்தவர் மலையாளமும் தெலுங்கும் சுயமாகக் கற்றுக் கொண்டு தேசாபிமானி, பிரஜா சக்தி பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளை தமிழாக்கம் செய்து தமிழ் வாசகர்களுக்கு வழங்கினார். அத்துடன் சொந்தமாகவும் கட்டுரைகள் எழுதினார். அவை தீக்கதிரிலும் செம்மலரிலும் வெளி வந்து பாராட்டைப் பெற்றன. அவற்றில் 20 கட்டுரைகள் அவரது முதல் நூலாக ‘சிந்தனைச் சிதறல்’ ஆக வெளிவந்துள்ளது. இன்றைய அரசியல் சூழ லுக்கு ஏற்ற வகையிலான கட்டுரை கள் முதல் இலக்கியம், இசை ஆளு மைகளின் அரிய தகவல்களுடன் அமைந்துள்ள கட்டுரைகள் வாச கர்களுக்குப் பயன் அளிப்பவை. இந்தியா இந்து தேசமல்ல எனும் காந்திஜியின் கருத்தும் உல குக்கே புதுவழிகாட்டிய காரல்மார்க்சின் இந்தியாவைப் பற்றிய தகவல்களும், இன்றைய இந்துத்துவவாதிகளுக்கு பதி லளிக்கும் கவியரசர் தாகூர், மகா கவி பாரதியின் படைப்புகளும் இந்த நூலில் இடம்பெற்றிருப்பது சிறப்பு. நூலாசிரியரே கார்ட்டூனிஸ் ட்டாக இருப்பதால் இந்தியாவின் மிகச்சிறந்த கார்ட்டூனிஸ்ட்டுகளான ஆர்.கே.லட்சுமணன், சங்கர்ஸ் வீக்லி சங்கர் ஆகியோர் பற்றிய அரிய பல தகவல்கள் கொண்ட கட்டுரைகளை படைத்திருக்கிறார். செம்மலர் நிறுவனர், நாவலா சிரியர் கு.சின்னப்ப பாரதியின் படைப்புகள் பற்றியும் பொய் வழக்கில் அவசரநிலை காலத் தில் சிறையில் அடைபட்டது பற்றி யும் தெரிந்து கொள்கிறோம். சுதந்தி ரப் போரில் இலக்கியவாதிகளின் அரசியல் பங்களிப்பு, சிறை வாழ்க்கை என பிரேம்சந்த், வைக்கம் முகமது பஷீர், ஓஎன்விகுரூப், இசையமைப்பாளரும் பாடகரு மான கண்டசாலா ஆகியோர் பற்றி யும் புதிய தகவல்களை கட்டுரை கள் தருகின்றன. ஏழைகளின் எழுத்தாளர் எனும் மேலாண்மை பொன்னுச்சாமி பற்றிய கட்டுரை யில் அவரை தமிழகத்தின் பிரேம் சந்த் எனச் சரியாகவே அடை யாளப்படுத்தியிருக்கிறார்.
அவரும் போராடி சிறை சென்றவர் என்ற தக வலையும் சேர்த்திருந்தால் செழுமையடைந்திருக்கும். இசையரசி எம்.எஸ்.சுப்பு லட்சுமி, சேர்ந்திசைச் செம்மல் எம்.பி. சீனிவாசன், தமிழுக்கு கிடைத்த கொடையான பாடகி பி.சுசீலா ஆகியோர் பற்றியும் ஏராளமான தக வல்கள் புதிதாக நமக்குக் கிடைக் கின்றன. சோவியத் இலக்கியம் பற்றியும் அந்நாடு தமிழுக்குச் செய்த சேவை பற்றியும் படிக்கும் போது புரட்சி யின் பெருமை நமக்குப் புரிகிறது. இன்றும் கூட கோவில் நுழைவு பிரச்சனையாக உள்ள போது, வைக்கம் போராட்டக் காலத்தில் ஆலய நுழைவு - விழிப்புணர்வு ஏற்படுத்திய தெலுங்கு திரைப்படம் ‘மாலப்பிள்ள’ கட்டுரை அருமை.
கடவுள் நம்பிக்கையாளர்களும் கம்யூனிஸ்ட்டுகளும் ஒன்று சேர்ந்து இயங்குவதே இன்றைய தேவை என்பதை உணர்த்தும் கட்டு ரையும் இடதுபக்கம் செல்க - கூடாதாம் என்கிற கட்டுரை யும் தற்போதைய நிலையை வெகு யதார்த்தமாக எடுத்துரைக்கிறது. மொத்தத்தில் இந்நூலில் உள்ள 20 கட்டுரைகளும் தேர்ந் தெடுத்து கோர்த்த முத்தாரம் போல் உள்ளது. இன்றைய அரசியல், இலக்கிய, சமூகச் சூழலில் அனை வரும் படித்தறிய வேண்டிய நூல்.
நூல் : சிந்தனைச் சிதறல்
ஆசிரியர் : தி.வரதராசன்
வெளியீடு : வைகை பிரிண்டர்ஸ் & பப்ளிசர்ஸ்,
6/16, புறவழிச்சாலை, மதுரை - 18.
பக்கம் : 160, விலை : ரூ.160/
இசை கைவினைஞர்களின் துயரமான வரலாறு
கர்நாடக இசை உலகின் பிர பல வாய்ப் பாட்டு இசைக்கலைஞரான டி.எம்.கிருஷ்ணா அவர்கள் பாரம் பரியமான தங்கள் இசைத்துறையில் நிகழும் கைவினைஞர்களுக்கு எதிரான சாதிய ஒடுக்குமுறைகள், அதன் ஏற்றத்தாழ்வுகள் குறித்து விரிவான நூலொன்றை எழுதியிருக்கிறார். குரலிசையில் உச்சம்தொடும் இசைக்கலைஞர்களுக்கு பக்கபலமாக பக்கவாத்தியம் இசைக்கும் கலை ஞர்களும் உயரம் தொடும்போது, அந்த வாத்தியக் கருவிகளை செய்து கொடுப் போர் எந்த நிலையிலும் வெளிவ ராமல் சத்தத்தின் ஓசையில் கரைந்து போய்விடுவதை மிக உன்னிப்பாக கவனித்து, அந்தக் கருவிகளை தயா ரித்து தரும் கைவினைஞர்களை கண்டு, அவர்களின் வாழ்க்கை, பண்பாடு, கலாச்சாரம், சாதியம், ஏற்றத்தாழ்வு, கல்வி, பொருளாதாரம் யாவற்றையும் உள்வாங்கி நூலாக்கம் செய்திருக் கிறார்.
மிகப்பிரபலமான முன்னணி இசைக் கலைஞராக விளங்கும் கர்நாடக இசையில் முற்போக்கான புரட்சிகளை செய்துவரும் தோழர் டி.எம்.கிருஷ்ணா பழம்பஞ்சாங்கமாக இருந்திருந்தால் இதைப்பற்றியெல்லாம் கவலைப் பட்டிருக்கமாட்டார். சக மனிதர்களின் மீதான நேசமும் அவர்களை கூர்ந்து கவ னித்து, அக்கலைஞர்களை உள்வாங்கி சமூகத்திற்கு அறிவிக்கும் மகத்தான பணியை முன்னெடுத்து, உலகின் முன் அவர்களின் துயரமான பாடலை தொகு த்து தந்துள்ளார்.
அந்த வகையில் சொகு சாக சாய்ந்து கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ள சமூகத்திலிருந்து விலகி, வாழ்வின் தாழ்நிலையில் வீழ்ந்து கிடக்கும் கலைஞர்களை, அவர்கள் வாழ்வியலின் அவலநிலை களை மிகத் துல்லியமாக படம்பிடித்து தானொரு செயல்பாட்டுக் கலைஞராக தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார். மிருதங்கத்தை தயாரிப்பவர்களை தேடி தன் பயணத்தை துவங்குகிறார். தஞ்சை, கும்பகோணம் என்று செவட்டியான் என்று அழைக்கப்படும் செபாஸ்டின் மற்றும் அவரது வழித்தோ ன்றல்கள் வழியே உண்மையைத்தேடி புறப்படுகிறார். அது மதுரை, வட சென்னை, மயிலாப்பூர் என நீள்கிறது. செவட்டியானின் மகனான பர்லாந்து அவரின் தொழில்திறன் அனைத்து முன் னணி இசைக்கலைஞர்களை அசர டிக்கிறது.
எத்தனையெத்தனை கைவினைஞர்கள், அவர்களின் பெயர் கள், பூர்வீகம் இன்னபிற கதைகள் யாவற் றையும் சலிக்காமல் தொகுத்துள்ளார். பெயர்களின் விவரணைகள் கொஞ்சம் போரடித்தாலும் அதில் சொல்லவரும் செய்திகள் இதுவரை யாராலும் சொல்லப்படாதது. சாதியத்தின் கோர முகத்தை பிய்த்து உலகம் காணத்தந்திருக்கிறார். இப்படி ஒரு உலகம் இருப்பதும் மனிதர் களை வஞ்சிக்க தீண்டாமை கொடுமைக் குள்ளாக்க என்னனென்ன வழிகள் இருக்கின்றது.
மனம் குமைந்தபடி சமத்துவமற்ற வாழ்க்கையை வாழ நேர்ந்த துயரத்தை காட்சிப்படுத்து கிறார். மிருதங்கச் சக்கரவர்த்திகளும் வித்வான்களும் மேளம் தாளம் இசைக் கும் விற்பன்னர்களும் தங்களுக்கான கருவிகள் யாரால் எவ்விதம் தயாரிக்கப்படுகிறது. அவர்களை வைத்து பிழைக்கும் நாம் அவர்களுக்கு தரும் சமூக மதிப்பு என்ன என்பதை நெஞ்சில் கைவைத்து உணர்ந்து நினைக்க வேண்டும். சபையில் அந்த கைவினைஞர்களுக்கு முதல் மரியாதை தர வேண்டும். ஆடு, மாடு, எருமை இவற்றின் தோலுரித்து அவற்றை பக்குவமாக பாடம் செய்து இசைக்கருவிகள் தயாரிக்கும் அந்த மூலவர்களின் இடம் தேடியும் போகிறார் டி.எம்.கிருஷ்ணா. தஞ்சையில் துவங்கி சென்னை வரை விரிந்து பரந்திருக்கின்ற கைவினைஞர் களின் வாழ்க்கையை மொத்தமாய் தொகுத்திருக்கிறார். பெண்களின் பங்களிப்பை பற்றியும் பேசுகிறார் சமூகத்தில் நிலவும் பெண்ண டிமைத்தனமே அந்தத் தொழிலிலும் நிலவுகிறது. இசைக்கருவிகளை செய்கிற கைவினைஞர்களுக்கான நியாயத்தை தேடியிருக்கிற டி.எம்.கிருஷ்ணா உண்மையில் பாராட்டப்படவேண்டிய வர். தமிழாக்கம் செய்த அரவிந்தனும் பாராட்டுக்குரியவர்.
நூல் : மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள்
செபாஸ்டியன் குடும்பக்கலை
ஆசிரியர்: டி.எம்.கிருஷ்ணா
மொழிபெயர்ப்பாளர்: அரவிந்தன்
பக்கம்: 321
விலை : 195
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்