“மதவெறி கொண்ட யானையை விட மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது. ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மிக்க தேசத்தை துண்டாட நினைப்பதை விட்டு விட்டு மக்கள் பிரச்சனைகளை பேசுவது தான் நாட்டிற்கு நலம் என்பதை எத்தனை ஜென்மங்கள் கழித்து இந்த பாஜக உணரப் போகிறதோ?” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.