கல்குவாரியில் குளித்த இளைஞர் மாயம்
செங்கல்பட்டு, ஜூன் 10- செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த சட்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரவேலன் மகன் செந்தில்குமார்(38)
மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத் தில் வேலை பார்த்து வந்தார். ஞாயிறன்று (ஜூன்9) மாலை ஆப்பூர் அடுத்த தாசரி குன்னத்தூர் பகுதியில் உள்ள கல்குவாரி பள்ளத் தில் உறவினர்களுடன் குளிக்கச் சென்றார். நீண்ட நேரம் குளித்துக் கொண்டி ருந்த செந்தில் குமார் திடீரென தண்ணீரில் மூழ்கி மாயமானார். அவரது உடலை மீட்புப்படையினர் தேடிவருகின்றனர்.
தங்கம் விலை குறைந்தது
சென்னை, ஜூன் 10- தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமான நிலையே நீடிக்கிறது. இந்நிலையில், சென்னையில் திங்களன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. கிரா முக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,630-க்கும் சவரன் ரூ. 53,040-க்கும் விற்பனையாகிறது.
பெண் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
சென்னை, ஜூன் 10- சென்னை டி.பி.சத்திரம் 9-வது தெருவில் வசித்து வருபவர் அமுதா (29). அவர் மீது ஞாயிறன்று இரவு 3 வாலிபர்கள் பெட்ரோல் குண்டை வீட்டின் மீது வீசி தப்பி சென்றனர்.
அமுதா மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு தவறி வேறு இடத்தில் விழுந்தது. இதனால் அவர் விபத்தில் இருந்து தப்பினார். பெட்ரோல் குண்டு வீசியதில் ஏற்பட்ட சத்தத்தில் அந்த தெருவில் உள்ள அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அமுதா டி.பி.சத்திரம் போலீசில் புகார் செய்தார்.
அந்த பகுதியில் கஞ்சா புகைத்த வாலிபர்களை கண்டித்த தால் தன்னை கொலை செய்வதற்காக இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் புகாரில் கூறியிருந்தார். அதன் அடிப்படை யில் போலீசார் விசாரணை நடத்தியதில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இன்று மின் விநியோகம் நிறுத்தம் பகுதிகள்
சென்னை, ஜூன் 10- சென்னையில் செவ்வாயன்று (ஜூன் 11) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திருவொற்றி யூர், கொட்டிவாக்கம், ஐஐடி குடியிருப்பு மற்றும் வேளச்சேரி எழில் நகர் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவொற்றியூரில் குமாரன் கோயில் தெரு, ஜிஎஸ்எல் டி.எச். சாலையில் ஒரு பகுதி, சோலையப்பன் தெரு, கப்பல் போலு தெரு , வி.பி.கோவில் தெரு, தாண்டவராயன் தெரு, உள்ளிட்ட பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். ஐஐடி ஸ்ரீராம் நகர் பள்ளிப்பட்டு பிரதான சாலை, கொட்டிவாக்கம் கே.கே. ரோடு, சாஸ்திரி நகர் பிரிவு 2, 3 ,4 வார்டுகள் உள்ளிட்ட பல பகுதி களில் மின் விநியோகம் நிறுத்தப் படும்.