tamilnadu

img

சிபிஎம் நெல்லை அலுவலகம் மீது தாக்குதல்: திருவொற்றியூரில் ஆர்ப்பாட்டம்

சிபிஎம் நெல்லை மாவட்ட குழு  அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய வன்முறையாளர்களை கைது செய்ய கோரியும், சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவொற்றியூர்-எண்ணூர் பகுதி குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம், மாவட்டக் குழு உறுப்பினர் செல்வகுமாரி, நிர்வாகிகள் கே.வெங்கடையா, கே.கே.,புஷ்பா, ஆர்.ஸ்டாலின், அருமை ராஜ், அன்பு, கணேசன், சீனிவாசன் (கட்டுமானம்), கே.ஆர்.முத்துசாமி (சிஐடியு) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.