சென்னை, ஜூன் 21 - காலமுறை ஊதியம் கேட்டு வெள்ளி யன்று (ஜூன் 21) ரிப்பன் மாளிகை வளா கத்தில் சத்துணவு ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். சத்துணவு ஊழியர்கள் அரசு ஊழியர்க ளாக்கி, காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று சட்டமன்ற தேர்தலில் போது முதல மைச்சர் வாக்குறுதி அளித்தார்.
அதன்படி, நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே காலமுறை ஊதியம் வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய 9 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும், 50 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,
காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாகவே செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாலை நேர தர்ணா நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக சென்னை மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் என்.சித்ரகலா தலைமை தாங்கினார்.
மாவட்டச் செயலாளர் எஸ்.சுந்தரமூர்த்தி கோரிக்கை களை விளக்கி பேசினார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கற்பகம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வடசென்னை மாவட்டத்தலைவர் வி.விஜய குமரன் உள்ளிட்டோர் பேசினர்.