tamilnadu

img

பாஜகவில் ரவுடிகளை சேர்த்துவிட்டதாக அண்ணாமலை மீது புகார்

சென்னை, ஜூன் 9- தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை ரவுடிகளை சேர்த்து விட்டதாகவும் தாம் உள்பட பாஜக வேட்பாளர்கள் பலர் வெற்றியை அண்ணாமலையின் கூட்டணி  வியூகம் கெடுத்துவிட்டதாகவும் முன்னாள் தலைவர் தமிழிசை  சௌந்தரராஜன்    குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் பாஜக வளர்ந்து விட்டதாக அண்ணாமலை ஆதரவாளர் கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வும் அவர்களுக்கு என்று செய்திகளை வெளியிடும் பாலிமர், நியூஸ் 18 தமிழ் உள்பட பல ஊடகங்களில் போலியான செய்திகளை பரப்பி வருகின்றனர். 

தமிழிசை தாக்குதல்

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் பாஜக செயல்பாடு குறித்து அக்கட்சி யின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் பேட்டி அளித்துள்ளார். அதில்,  நாங்கள் கட்சிக்காக கடுமையாக உழைக்க கூடியவர்கள். நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன். எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன்.  நான் இங்கேதான் இருப்பேன். ஆளுநர் பணியை விட்டு நான் ஏன் இங்கே பணிகளை செய்கிறேன் என்றும் சிலர் பேசுகிறார்கள். கட்சியினருக்கே கேட்கிறேன். ஆளுநர் பணியை விட்டு  விட்டு வந்ததற்கு நானே கவலைப்பட வில்லை. உங்களுக்கு என்ன கவலை என்று கேட்டுள்ளார்.

கட்சியில் சின்ன வருத்தம் உள்ளது. எனக்கு என்று ஒரு கட்டுப்பாடு இருந்தது. நான் இருந்த போது கட்டுப்பாடு இருந்தது. நான் சிலரை கட்சிக்குள் அனுமதிக்க மாட்டேன். கட்சியில் இருக்க சிலருக்கு அனுமதி இல்லை. அதாவது சமூக விரோத ரவுடிகள் போல இருப்பவர்களை கட்சிக்குள் விட மாட்டேன்.  ஆனால் இப்போது அப்படி கட்சியில் சிலர்  சேர்க்கப்பட்டு உள்ளனர். நான் அதற் கெல்லாம் கட்டுப்பாடு விதித்தேன். கட்சியில் இப்போது ரவுடிகள் சமீப காலங்களில் சேர்ந்து உள்ளனர்.  

கட்சியில் கடுமையாக உழைக்கும் தலைவர்களுக்கு பதவி தர வேண்டும். நாங்கள் எல்லாம் 2ம் இடம் வரக்கூடியவர்கள் இல்லை. வியூகம் அமைத்து கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம். தேர்தலில் வியூகம் அமைத்தால்தான் வெற்றி பெறலாம். தேர்தல் கூட்டணி என்பது வியூகம். நாங்கள் வெற்றிபெறக் கூடிய நபர்கள். ஆனால் இரண்டாம் இடம் வந்துவிட்டோம்.

அதிமுக - பாஜக வாக்கு சேர்ந்திருந்தால் வென்றிருப்போம். கூட்டணி வைக்கலாம் என்று நாங்கள் வியூகத்தை அமைத்தோம். சகோதரர் அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை. அதனால் செய்யவில்லை. 

இந்த நிலையில்தான் எக்ஸ்  தளத்தில் அண்ணாமலை ஆதரவா ளர்கள் தமிழிசையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவரை கடுமையாக தாக்கிப் பேசி  வருகின்றனர். அதில் தமிழிசைக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்ததே அதி சயம். இப்போது அண்ணாமலை யை விமர்சனம் செய்கிறார். அண்ணா மலைக்கு ப்ரீ ஹேண்ட் கொடுங்கள். தமிழிசையை வடஇந்தியாவிற்கு ஆளுநராக அனுப்புங்கள். அவர் அண்ணாமலையை தனியாக செயல்பட விடமாட்டார். பாஜகவில் ஒரு திராவிட கும்பல் உள்ளது. அது எஸ்.வி.சேகர், கல்யாணா ராமன், தமிழிசை குழு. இவர்களை எல்லாம் கட்சியை விட்டு நீக்க வேண்டும்- என்று  திருச்சி சூர்யா உள்ளிட்ட அண்ணா மலைக்கு ஆதரவான கோஷ்டியை சேர்ந்தவர்கள் கடுமையாக பதிவு களை வெளியிட்டு வருகின்றனர்.