சென்னை,ஆக.12- சென்னையில் காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் அறிகுறியுடன் ஏராளமான குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
திடீர் காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந் தைகள் வாந்தி, கழுத்து வலி உள்ளிட்ட மாறுபட்ட உடல் நிலையுடன் சிரமப்படு கின்றனர்.
இந்த அறிகுறியுடன் காணப்பட்ட குழந்தைகள் சாப்பிட மறுப்பதும் தொடர்ந்து அழுவதும் மூளைக்காய்ச்ச லின் அறிகுறியாக இருக்கலாம்என கூறப்படுகிறது. இதுபற்றி தனியார்மருத்துவ மனையின் குழந்தைகள் நல மூத்த மருத்து வர் டாக்டர் தீபாஸ்ஹரிகரன் கூறியதாவது:-
பருவமழை காலங்களில் காய்ச்சல், சளி வழக்கமானது தான். ஆனால் காய்ச்சல் வந்ததும் மருந்து கொடுத்தும் 48 மணி நேரத்துக்கும் மேலாக காய்ச்சல் நீடித் தாலோ, குழந்தைகள் சோர்ந்து போனாலோ உடனே மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.
காய்ச்சல் வந்தாலும் அது 103 டிகிரி அளவுக்கு கொதிப்பது, சமாதானப்படுத்த முடியாமல் அழுது கொண்டிருப்பது, கொஞ்சம் கூட பால் குடிக்க முடியாமல் பலவீனமாக இருப்பது, 6 முறைக்கு மேல் வாந்தி, பேதி ஏற்படுவது, இருமும்போது மூச்சு வாங்குவது போன்ற அறிகுறிகள் இருந்தாலும் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
மூளைக்காயச்சலை ஆரம்ப நிலையில் கண்டு பிடித்தால் குணமாக்கி விடலாம். பள்ளிகள் திறந்ததும் யாராவது ஒரு குழந் தைக்கு காய்ச்சல் காணப்பட்டாலும் மற்றவர் களுக்கு எளிதாக பரவும் வாய்ப்புள்ளது.
குழந்தைகளுக்கு அனைத்து தடுப்பூசி களையும் முறையாக போடுவது ஓரளவு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். அதிமாக சளி பிடிக்கும் குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் பன்றி காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தை களுக்கு கை, கால்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றார்.