சென்னை, ஆக. 10- வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்தப் பணிக்கான கால நிர்ணய அட்டவணை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அக்டோபர் 29 முதல் நவம்பர் 28 தேதி வரை நடைபெற வுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு முன்பு, வாக்காளர்களின் விவரங்களை வீடு, வீடாகச் சேகரிக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
இந்தப் பணிகளை வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர் 18 வரை மேற்கொள்கின்றனர். அதைத் தொடர்ந்து, வரைவு வாக்கா ளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் அக்டோ பர் 19 முதல் 28 வரை நடைபெறவுள்ளது.
இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும், வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக அக்டோபர் 29 அன்று வெளியிடப்பட உள்ளது. அந்தக் காலகட்டத்தில் வாக்கா ளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.