‘ஓய்வெடுக்க வேண்டிய காலகட்டத்தில் இராமநாதபுரத்தில் பலாப்பழத்தைச் சுமந்து கொண்டு தட்டுத் தடுமாறி வாக்கு சேகரித்து வருகிறார் ஓபிஎஸ். இந்தியாவிலேயே 10 ஆண்டு கால பாஜக ஆட்சி ஊழல் இல்லாத ஆட்சி’ என்று டிடிவி தினகரன் கூறுகிறார். “ஊழல் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குச் சென்று வந்தவர் பாஜக ஆட்சிக்கு சர்டிபிகேட் தருகிறார். நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. மக்கள் மறந்தும் பாஜகவிற்கு வாக்களித்து விடக்கூடாது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பேசியுள்ளார்.