tamilnadu

நடிகர் கவுண்டமணிக்கு எதிரான தனியார் நிறுவன வழக்கு தள்ளுபடி

சென்னை, மே 16- நடிகர் கவுண்டமணிக்கு எதிராக தனியார் கட்டுமான நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

நடிகர் கவுண்டமணி, சென்னை   கோடம்பாக்கம், ஆற்காடு சாலையில் 1996ல்  வாங்கிய ஐந்து கிரவுண்டு நிலத்தில் 22,700 சதுர அடியில் வணிக வளாகம் கட்ட ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார். ஒப்பந்தப்படி 2003 வரை கட்டுமான பணி தொடங்கவில்லை என கவுண்டமணி ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, கவுண்டமணியிடம் பெற்ற நிலத்தை மீண்டும் அவரிடம்   ஒப்படைத்துவிட்டு, 2008 ஆகஸ்ட் மாதம் முதல், மாதம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து கட்டுமான நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் செவ்வாயன்று  விசாரணைக்கு வந்தது. வழக்கை விசா ரித்த நீதிபதிகள், கட்டுமான  நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.