கோண்டூர், கூத்தப்பாக்கத்தில் அணுகு சாலை
குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
தேசிய நெடுஞ்சாலையில் கோண்டூர், கூத்தப்பாக்கத்தில் அணுகு சாலை அமைக்க வலியுறுத்தி கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) நடை பெற்றது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் அமைக்கப்பட்ட நாகப்பட்டினம் புற வழிச்சாலையில் கோண்டூர் மற்றும் கூத்தப்பாக்கம் பகுதியில் அணுகு சாலை அமைக்க வேண்டும். நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை கழிவுநீர் கெடிலம் ஆற்றில் விடுவதை தடுக்க வேண்டும், கடலூர் முதல் விழுப்புரம் வரை போக்குவரத்தை துவக்க வேண்டும். கடலூர் மாநகராட்சி ஒன்றிய பகுதிகளில் அதிகரித்து வரும் நாய், பன்றி, கொசு உற்பத்தியை மாநக ராட்சி, ஊராட்சி நிர்வாகிகள் உடனடி யாக கட்டுப்படுத்த வேண்டும். விபத்து களை ஏற்படுத்தும் சாலையில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த அனைத்து நகரங்களிலும் முறையான ஒருங்கி ணைந்த வடிவால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் கடுமையான வரி விதிப்பு குளறுபடிகளையும் மாற்றி சென்னை மாநகராட்சி செய்தது போல் வரிகளை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் பாலு.பச்சையப்பன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் டி.எஸ். ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் பி. வெங்கடேசன், சிறப்பு தலைவர் எம்.மருதவாணன், பொருளாளர் பி.கே. வெங்கட்ரமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.கே.சரவணன், அனைத்து பொதுநல இயக்கங்களில் ஒருங்கிணைப்பாளர் எஸ்.என்.கே.ரவி, மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர் ஆர். அமர்நாத், மீனவர் பேரவையின் சுப்புராயன் உள்ளிட் டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
சைபர் குற்றத்தில் ஈடுபட்டவர் மீது
குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
சைபர் குற்றத்தில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்தவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். சென்னை ராமநாதபுரம் கே.பி. நகர் பகுதியில் வசித்து வருபவர் வாசு மகன் கோபி கிருஷ்ணன் (வயது 36). செஞ்சி பகுதியில் போலி கால் சென்டர் நடத்தி 10-க்கும் மேற்பட்டோரிடம் ஆன்லைன் மூலம் கடன் தருவதாக கூறி ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் பெற்று மோசடி செய்த தாக கோபிகிருஷ்ணன் கடந்த மாதம் விழுப்பு ரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீ சார் கைது செய்து கடலூர் மத்திய சிறை யில் அடைத்தனர். தொடர்ந்து இவர் இது போன்ற பல்வேறு மாவட்டங்களில் ஆன்லைன் மூலம் பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது.இவரின் இத்தகைய செயல்களை தடுக்கும் வகை யில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பரிந்துரை செய்தார். இதையடுத்து கோபிகிருஷ்ணன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கும் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டார். அதன்பேரில் கோபி கிருஷ்ணன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சைபர் கிரைம் பிரிவு போலீசார் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான உத்தரவு நகலை, கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினார்.