tamilnadu

img

கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை - பி.சீனிவாசுலு

சென்னை மாநகராட்சி 200  வார்டுகளாகவும், 15 மண்டலங்களா கவும் அமைந்துள்ளது. இதில் 1, 2, 3, 7ல் ஒருபகுதி ஆகிய மண்டலங்களில் சென்னை என்விரோ சொல்யூஷன் நிறுவனமும், 9, 10, 11, 12, 13, 14, 15 ஆகிய மண்டலங்களில் அர்பசேர் ஸ்மித் நிறுவனமும் குப்பை அள்ளும் பணியை செய்கிறது. எஞ்சிய 4, 5, 6, 8  மற்றும் 7ல் ஒரு பகுதி ஆகிய மண்ட லங்களில் மாநகராட்சி குப்பையை அள்ளி வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் பல  பகுதிகளை சென்னை மாநகராட்சி யுடன் இணைக்க அரசு திட்ட மிட்டுள்ளது. இதன்படி மாநகராட்சி 300 வார்டுகளையும், 23 மண்டலங்களை யும் கொண்டதாக மாற்றப்பட உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த சூழ்நிலை, 5 மற்றும் 6வது  மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை தனியார்மயமாக்க ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது. மேலும், 4, 8, 7வது மண்டலத்தின் ஒரு பகுதியில் குப்பை அள்ளும் பணியையும் தனியார்மயமாக்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியை கோர உள்ளது. இந்த நிலையில், 5, 6வது மண்ட லங்களில் குப்பை அள்ளும் பணியை தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் எடுக்க செப்.24ந் தேதி கடைசி நாளா கும். இந்த  தனியார் மய நடவடிக்கை களை முழுமையாக ரத்து செய்யக்கோரி மாபெரும் மனித  சங்கிலி போராட்டத்தை செங்கொடி  சங்கம் நடத்துகிறது. தனியார்மயத் திற்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடு தலை சிறுத்தைகள், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். 2006ஆம் ஆண்டு 1688 பேர், 2008ஆம் ஆண்டு 2025 பேர் என  தொகுப் பூதியம்,

தினகூலி பெற்று வந்த   ஒப்பந்த தொழிலாளர்கள் செங்கொடி சங்கம் நடத்திய தொடர் போராட்டம் காரணமாகவும், 27 என்.எம்.ஆர் தொழிலாளர்கள் தொடர்ந்த வழக்கு  காரணமாகவும், நிரந்தரப் படுத்தப்பட்டனர். மேலும் செங்கொடி சங்கத்தின் அழுத்தத்தின் காரணமாக 2010ல் 900க்கும்  மேற்பட்டோர் மாநகராட்சியால் நேரடியாக நியமிக்கப்பட்டனர். 2013-2020 வரை மாநகராட்சியில் ஸ்வர்ண ஜெயந்தி, எல்.யு.எல்.எம்  திட்டங்களின் கீழ்  12ஆயிரம் ஒப்பந்தத்  தொழிலாளர்கள் பணியமர்த்தப் பட்டனர். 2020ஆம் ஆண்டு தனியார்மய நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டபோது செங்கொடி சங்கம் தொடர் இயக்கம் நடத்தியது. இதனையடுத்து 2021 ஜனவரி 19ந்  தேதி  எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அவர்களுடைய கடிதம் தற்போதைய அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு தா.மோ.அன்பரசன் ஆகியோர், மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷிடம் அளித்தனர். திமுக ஆட்சிக்கு வந்தால் 12ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்வோம் என்றனர். ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகளை கடந்த  பிறகும் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை. தற்போது எஞ்சியுள்ள 4460 என்.யு.எல்.எம் மற்றும் 463 என்.எம்.ஆர் தொழிலாளர்களை கூட நிரந்தரம் செய்யாமல், தனியார்மயமாக்க துடிப்பது சரியல்ல.