tamilnadu

கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு குடம் தண்ணீர் 20 ரூபாய்

சென்னை,ஜூன்19- பருவ மழை பொய்த்து போனதால் சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரும் வறண்டு வருவதால் ‘போர்வெல்’ தண்ணீரும் சில  பகுதிகளில் தான் கிடைக்கிறது. மக்கள் இரவு- பகல் பாராமல் லாரி தண்ணீரை எதிர்பார்த்து காத்திருந்து தண்ணீர் பிடிக்கிறார்கள். இப்போது வீடுகள் மட்டுமின்றி கடைகளிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வியாபாரிகள் தின மும் வந்து செல்லும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் கழிவறைகளில் தேவையான தண்ணீரை ஊற்றுவது இல்லை. இதனால் கழிவறைகளில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பூ மார்க்கெட்டில் 4 கழிவறைகள் உள்ளன.  அங்கும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளதால் 2  கழிவறைகள் மூடிக்கிடக்கிறது. பூ மார்க்கெட்  கடைகளுக்கு அங்குள்ள பெண்கள் வாடிக்  கையாக ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு வழங்கி வந்தனர். ஆனால் இப்போது தண்ணீர்  தட்டுப்பாடு காரணமாக ஒரு குடம் தண்ணீரை 20 ரூபாய்க்கு வழங்குகிறார்கள். இதனால் பூக்களுக்கு தண்ணீர் தெளிப்பதில் சிக்கனத்தை கடைபிடிக்கின்றனர்.  சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கோயம்பேடு மார்க்கெட் முழுவதும் இலவச மாக தண்ணீர் வழங்க தேவையான நடவடிக்  கையை எடுக்க வேண்டும். தினமும் ஆயிரக்  கணக்கான வியாபாரி களும், பொதுமக்க ளும் வந்து செல்லும் கோயம்பேடு மார்க்கெட்  சுகாதாரமாக திகழ வேண்டுமானால் தண்ணீர்  வசதியை அரசு தாராளமாக செய்து கொடுக்க  வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.