உயிரை உருக்கும் மார்கழிப் பனியில்
உதிரத்தை வியர்வையாய் உதிர்க்கும் - எமது
உழைப்பாளி மக்களிடம்
உண்டியல் ஏந்தி செல்கிறோம்.
மக்கள் வாரி வழங்குகிறார்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களிடம் நிதி திரட்டும் இயக்கம் கடந்த 2023 டிசம்பர் 24இல் துவங்கி 2024 ஜனவரி 7ஆம் தேதி வரையி லான கடந்த 15 நாட்களில் 1371 குழுக்கள் மக்களிடம் சென்று ரூ.25,02,941/- நிதியாக திரட்டி உள்ளோம். இன்னும் ஜனவரி 17 பொங்கல் விடுமுறை நாள் வரையில் 10 நாட்கள் மக்களிடம் செல்ல உள்ளோம். 2 லட்சம் குடும்பங்களை சந்திக்க திட்ட மிட்டதில் இதுவரையில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்களை சந்தித்துள்ளோம். இன்னும் 50 ஆயிரம் குடும்பங்களை சந்திக்க உள்ளோம். கட்சியின் செயல்பாட்டிற்கான நிதியினை உழைப்பாளி மக்களிடமும், கட்சி உறுப்பினர் களிடமிருந்துமே வசூலிப்பது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெறிமுறை களில் ஒன்றாகும்.
அதன்படியே நீண்ட காலமாக மக்களைச் சந்தித்து நிதி பெறும் பணி நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 1995 ஆம் ஆண்டில் முதன் முதலாக மறைந்த தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் மாவட்டச் செயலாளராக இருந்தபோது ஜனவரி மாதம் ஒரு இயக்கமாக துவங்கப்பட்ட மக்களிடம் நிதி திரட்டும் பணி 30ஆம் ஆண்டாக உற்சாகம் வழியாது ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருவதோடு தொடர்ந்து முன்னேறி வருகிறது.
கட்சியின் ஊழியர்களும், ஆதரவாளர்களும் சலிப்பின்றி இப்பணியில் ஈடுபடுகின்றனர். பெண் தோழர்களின் பங்கேற்பும் குறிப்பிடத் தகுந்ததாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள நகரங்கள், பேரூர் துவங்கி சிறு கிராமங்கள் வரை வீடு வீடாகச் செல்லும்போது எத்தனை எத்தனை அனுபவங்கள். மாவட்டத்தின் முக்கியத் தொழில்களான தீப்பெட்டி, பட்டாசு, அச்சு, பஞ்சாலை, விசைத் தறி, கைத்தறி, கார்மெண்ட்ஸ் ஆகியவற்றில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். மாவட்டத்தின் சரிபாதியாக உள்ள கிராமப்புறங்களில் நெல், பருத்தி, சோளம், பயறு வகைகள் உள்ளிட்ட விவசாயம் பரவலாக நடைபெற்று வருகிறது.
ஒன்றிய மோடி அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு, கடுமையான மின் கட்டண உயர்வு, உற்பத்திப் பொருட்களின் தேக்கம், இதனால் ஜவுளி தொழில்கள் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பஞ்சாலைகளில் வார விடு முறை. கூட வழங்காமல் வேலை வாங்கியது ஒரு காலம். தற்போது வாரத்தில் இரு நாட்கள் விடுமுறை.
மின்தடை ஏற்பட்டால் விடுமுறை என தொழிலாளர்களின் வேலை நாட்கள் சுருங்குகின்றன. இதனால் வருமானமும் குறைகிறது. டிசம்பரில் பெய்த பேய் மழையால் பல்லா யிரம் ஏக்கர் விவசாயம் பாதித்தது. விவசாயிகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் படும் துயரங்களில் பங்கேற்பதோடு மக்களின் கோரிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமான பல போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வந்துள்ளோம். மக்கள் நலனே உயிர் மூச்சாக கொண்டு செயல்படுவதால் கட்சிக்கு நிதி கேட்டுச் செல்லும் போது மக்கள் தாராளமாக வழங்குகிறார்கள்.
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கும் மாலை போட்டு செல்லும் ஏராளமான பெண்கள். பழனி, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கும் மாலை போட்டு செல்லும் ஏராளமான ஆண்கள். கட வுளை பூசித்து கோவிலுக்கு செலுத்தும் காணிக்கையின் ஒரு பகுதியை மார்க்சிஸ்ட் கட்சிக்கும் நேசத்தோடு வழங்குகின்றனர். சாமானிய மக்களை பொறுத்தவரையில் கடவுளும், கம்யூனிஸ்ட்களும் ஒன்றுதான். ஏனெனில் கடவுள் நிறைவேற்றாத கோரிக்கை களை கம்யூனிஸ்ட்கள் போராட்டங்களின் மூலம் நிறைவேற்றுகின்றனர்.
மனதோடு பேசுகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி மாதம் ஒருமுறை மக்களிடம் வானொலியில் பேசுகிறார். 10 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்காத ஒரே பிரதமர், மக்களையும் சந்திக்கவில்லை என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மனதோடு பேசும் பிரதமரின் மனது அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்காகவே துடிக்கிறது.
2018 முதல் 2022 வரையில் பெரும் பணக்காரர்களிடம் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாரதிய ஜனதா கட்சி ரூபாய் 9200 கோடி வசூலித்துள்ளது. இதுதவிர கடந்த ஓராண்டில் 39 பெருநிறுவனங்கள் தங்களது அறக்கட்டளை கள் மூலம் ரூபாய் 363 கோடி அரசியல் கட்சி களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
இதில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் ரூபாய் 256 கோடி நன்கொடை பெற்றுள்ளது. (தினமலர் 5.1.2024). தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வசூ லிக்காத ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. பெரும் பணக்காரர்களிடம் பணம் பெறுவதால் பாரதிய ஜனதா கட்சியும், பிரதமர் மோடியும் பெரும் பணக்காரர்கள் நலனுக் காகவே பாடுபடுகின்றனர். உழைப்பாளி மக்களிடம் நிதி திரட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உழைக்கும் மக்கள் நலனுக்காகவே பாடுபடுகிறது. உழைப்பாளி மக்கள் மனதோடு பேசும் மாபெரும் இந்த இயக்கம் விருதுநகர் மாவட்டத்தில் மேலும் வளரும்... முன்னேறும்... வெற்றிபெறும்.