ஒரு தோழரின் வரலாறு - மதுக்கூர் இராமலிங்கம்
புதுச்சேரி மாநில பொது வுடைமை இயக்கத்தின் அடையாளங்களில் ஒருவராகத் திகழ்பவர் தோழர் தா.முருகன். அவ ருடைய வாழ்க்கை வரலாற்றை எஸ். இராமச்சந்திரன் நூலாக எழுதி யுள்ளார். “இந்த நூல் தோழர் தா.முருகனின் வாழ்க்கை வரலாறாக அல்லாமல் புதுச்சேரியின் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றையும், 1964-ஆம் ஆண்டுக்குப்பிறகு உரு வான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வரலாற்றையும் சுருக்கமாக அறி முகம் செய்யும் நூலாக வெளியா கிறது” என்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் எழுதியுள்ள முன்னுரையில் “நள்ளி ரவுக் கடைகளின் நாயகன்” என்பது அடையாளம் என்கிறார் தோழர் முருகன். எளிய மக்களின் பிளாட்பாரக் கடைகளை பாதுகாப்பதற்காகக் கட்சித் தலைவர் என்ற முறையில் நடத்திய போராட்டத்தினால் கிடைத்த பெயர் இது.
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வர லாற்றை இன்னமும் ஆவணப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில் தோழர் எஸ்.இராமச் சந்திரன் ஆற்றியுள்ள பணி போற்று தலுக்குரியது. கம்யூனிஸ்ட்டுகளின் வாழ்க்கையை ஒரு தனிமனித வர லாறாகக் கருதாமல், இயக்க வர லாற்றின் ஒரு பகுதியாகக் கருதி பதிவு செய்வது எதிர்கால தலைமுறையின ருக்கு உதவும்.
கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை கூட்டு முடிவு, கூட்டுத் தலைமை என்பதே பிரதானம். எனினும், ஒவ்வொருவரின் தனித்துவமான ஆற்றலும் பங்களிப்பும் வித்தி யாசப்படும். அந்த வகையில், புதுச்சேரி தோழர் முருகன் பன்முகத்தன்மை கொண்ட ஒரு போராளி. வெகுஜனத் தன்மையோடு அனைவரையும் அர வணைத்துச் செல்லும் தலைவர். கொண்ட கொள்கையிலும், ஏற்றுக் கொண்ட பாதையிலும் தடுமாறா மலும்; தடம் மாறாமலும் பயணிப்பவர்.
புதுவையில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவமனை புதுவை, தமிழக மக்களுக்கு மட்டுமின்றி தென்மாநில மக்கள் அனைவருக்கும் பலனளிக்கக் கூடிய ஒன்றாகத் திகழ்கிறது. அந்த மருத்துவமனையை தனியாருக்குத் தாரை வார்க்க ஒன்றிய அரசு முயற்சித்தபோது மக்களைத் திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்கள் ஒரு வீர காவி யம். அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர் தோழர் தா.முருகன்.
இந்த நூலில் ஜிப்மர் பாதுகாப்புப் போராட்டம் குறித்து விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இதைப் படித்தால், ஒரு போராட்டத்தை எவ்வாறு தொய்வின்றி தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
பண்டித ஜவஹர்லால் நேரு, தோழர் ஏ.கே.கோபாலன் போன்ற தலைவர்களது பங்களிப்புடன் தொடங்கிய இந்தியன் காபி ஹவுசை பாதுகாத்ததையும் அங்கே ஒரு தொழி லாளர் சங்கத்தை உருவாக்கி சிஐடியு தலைமையில் இயங்க வைத்ததையும் அதில் முருகனின் பங்களிப்பையும் இந்நூல் விளக்குகிறது.
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை யாரின் பாடல்களை தன்னுடைய உரை களில் பொருத்தமாக இணைத்துக் கூறுவது தோழர் முருகனின் தனிச் சிறப்பு. இதனால் அவர் இலக்கிய மேடைகளுக்கும் சென்றார். பட்டுக் கோட்டையாரின் புகழ் பாடுகிற வானம்பாடிகளில் ஒருவர் என்பதில் பெருமை கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் பிறந்து வேலை நிமித்தமாக புதுச்சேரிக்குச் சென்ற தோழர் முருகன் அந்த மாநில தொழிலாளர் வர்க்க மற்றும் அரசியல் இயக்கங்களோடு தன்னை நெருக்கமாக பிணைத்துக் கொண்டார்.
தெருமுனைக் கூட்டங்களாக இருந்தாலும் சரி, போராட்டக்களங் களாக இருந்தாலும் சரி இவரது குரல் தனித்து ஒலிக்கும் என்பதை இந்நூலில் பல்வேறு அத்தியாயங் களில் எஸ்.இராமச்சந்திரன் விவரித் துள்ளார்.
இந்த நூலுக்கு தோழர் சுதா சுந்தரராமன் வழங்கியுள்ள முன்னு ரையில், தோழர்களோடும் அவர்களது குடும்பத்தாரோடும் தோழர் முருகன் எந்தளவு நேசத்தோடும் பாசத் தோடும் பழகுவார் என்பதை பெரு மிதத்தோடு குறிப்பிட்டுள்ளார். அவர், எளிய மக்களின் தோழர். எளிய குடும்பங்களின் நலன் விரும்பி. அனைத்தும் சேர்ந்த அலாதியான கம்யூனிஸ்ட் என்று குறிப்பிட்டுள்ளார்.
சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியில்லாமல் அவருடைய குடும்பம் ஒரு சமத்துவபுரமாகவே விளங்குகிறது. தமிழக அரசியலி லிருந்து புதுவை மாநில அரசியல் சற்று வித்தியாசமானது. அதை முழு மையாக புரிந்துகொள்ளவும் இந்த நூல் உதவும்.
இது ஒரு தனி மனிதரின் வர லாறல்ல. தத்துவத்தால் இயக்கப் படும் லட்சக்கணக்கான தொண்டர் களில் ஒருவரான தோழரின் வரலாறு.
புதுச்சேரி செங்கொடி இயக்கத்தில் தோழர் முருகன்
நூலாசியர்: எஸ்.இராமச்சந்திரன்.
விலை ரூ.275.
வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,
சென்னை-600 018.
பொதுசிவில் சட்டமா? பிராமணிய சிவில் சட்டமா? -ப.முருகன்
பிரதமர் நரேந்திர மோடி சுதந்திரதின உரையின் போது மதச்சார்பற்ற சிவில் சட்டம் கொண்டு வர வேண்டியது அவசியம் என்று கூறியிருந்தார். என்ன இது, திடீரென மதச்சார்பற்றது எனப் பேசுகிறாரே என்று நினைத்தால் அது நம்தவறு. ஆர்எஸ்எஸ் பரிவாரம் தனது குரலை அவ்வப்போது மாற்றிக்கொள்ளும். ஆனால் அதன் உள்ளார்ந்த நோக்கம் ஒரு போதும் மாறாது. முன்பு பொது சிவில் சட்டம் என்று கூறியதைத்தான் தற்போது புதியது போல மதச்சார்பற்ற சிவில் சட்டம் என்று கூறியிருக்கிறார். ஏற்கெனவே புதிய குற்றவியல் சட்டங்கள் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று சட்டங்களும் இந்துத்வா மத வெறிக்கூட்டத்தினர் நடத்தும் கொலைகளுக்கும் குற்றங்களுக்கும் விலக்களிக்கும் வகையிலும், தண்டனையை குறைத்தும் காவல் துறையினருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் நோக்கிலும் கொண்டு வரப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து இப்போது பொது சிவில் சட்டம் பற்றிப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி.
குற்றங்களுக்கு ஒரே தண்டனை வழங்கப்படுவது போல சிவில் சட்டமும் ஒரே மாதிரியாக கொண்டு வரப்பட வேண்டும் என்று நியாயவான் போல பேசியிருக்கிறார். சிவில் வாழ்க்கை நடைமுறைகள் என்பது தனி மனிதரின், சமூகத்தின் குழந்தைப்பருவம் முதல் முதுமைக் காலம் வரையிலான வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படும் பழக்க வழக்கங்கள் - உணவு, உடை, கல்வி, திருமண நடைமுறைச் சடங்குகள், விவாகரத்து, குழந்தை தத்தெடுத்தல் சொத்துரிமை, வாரிசுரிமை, மத நம்பிக்கை, கடவுள் வழிபாடு, பண்பாடு, கலாச்சாரம் , இறுதி நிகழ்ச்சியின் போதான சடங்குகள் என நடைமுறையில் புழங்கும்பழக்கவழக்கங்கள், தனிப்பட்ட வாழ்க்கையின் அம்சங்கள் அனைத்தும் அடங்கியதாகும். இந்தியா போன்ற பலவேறு மதங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்ட துணைக்கண்டத்தில் ஒரே மாதிரியான நடைமுறைகளைக் கொண்ட சட்டம் என்பது எத்தகையதாக இருக்கும்? இப்போது புரிகிறதா பிரதமர் பேச்சின் உள்ளர்த்தம். முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தவர், ஜைனர்கள், பார்சிகள் உள்ளிட்ட பல்வேறு மதத்தவர்களுக்கு ஒரே சிவில் சட்டம் என்பது எப்படியிருக்க முடியும்? அதாவது இந்து மதச்சட்ட திட்டங்களை அனைத்து பிற மதத்தினர் மீதும் திணிப்பதுதான் இவர்களின் ஒரே நோக்கம். ஆர் எஸ்எஸ் - சின் ஒரே நாடு ஒரே மதம், ஒரே பண்பாடு- நோக்கிய நாசகர நகர்வு இது. இது பிற மதத்தவரை மட்டும்தான் பாதிக்கும் என்பதல்ல; இந்துக்களிலேயே சைவ, வைணவ மற்றும் பல பிரிவினரையும் பாதிக்கும். பல வேறு மதங்கள், மக்கள் திரள்கள் உள்ள இலங்கை போன்ற சிறிய நாடாயினும் அமெரிக்கா போன்ற பெரிய நாடாயினும் அங்கு பொதுசிவில் சட்டம் நடைமுறையில் இல்லை. தனி மனித சுதந்திரம், மதச்சுதந்திரம் அங்கு மதிக்கப்படுகிறது. இங்கு அதற்கு நேர்மாறான நிலை உள்ளதால் தான் இத்தகைய பழைய இந்துத்துவா தீவிரக் கொள்கையை அமலாக்க நினைக்கிறார் மோடி. அதுவும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையிலும் கூட. இந்த பொதுசிவில் சட்டம் என்கிற பசுத்தோல் போர்த்திய புலியைப் பற்றி அரசியல் ஆர்வமுள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல் அருணன் அவர்களின் பொதுசிவில் சட்டமா? பிராமணிய சிவில் சட்டமா? 2003 ஆம் ஆண்டிலே முதல் பதிப்பு கண்ட இந்நூல் காலத்தின் தேவை கருதி 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வந்துள்ளது. இந்துத்வா மதவெறியர்களின் உண்மை சொரூபத்தை பல்வேறு ஆதாரங்களுடனும் தரவுகளுடனும் அம்பலப்படுத்தும் நூல். காலத்தின் தேவை கருதி அனைவரின் கரங்களிலும் இருக்க வேண்டிய நூல்.
பொதுசிவில் சட்டமா?
பிராமணிய சிவில சட்டமா?
அருணன்
வெளியீடு: வசந்தம்
வெளியீட்டகம்,
69 - 24 ஏ அனுமார் கோவில் படித்துறை,
சிம்மக்கல், மதுரை - 625001.
பேசி: 9384813030
பக்கம் : 56,
விலை: ரூ 50