tamilnadu

img

ஆடல், பாடல், நாடகம் உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகளுடன் வடசென்னையில் கோடைச் சிட்டுக்களின் கொண்டாட்டம்

சென்னை, ஜூன் 18- வடசென்னை மாவட்டம், பாலர் பூங்கா சார்பில் “கோடைச் சிட்டுக்களின் கொண்டாட்டம்” என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் பெரம்பூரில் திங்களன்று (ஜூன் 17) நடைபெற்றது.

குழந்தைகள் ஜெ.காவ்யா, எம்.அனிதா, சோனாக்ஷி ஆகியோர் தலைமை தாங்கினர். ‘சமூக சிந்தனைகள்’ என்ற தலைப்பில் அறிவியல்  இயக்க நிர்வாகி ராமமூர்த்தி பேசினார். அறிவியல் இயக்கம்  வட சென்னை மாவட்ட நிர்வாகி ஆர்.ஆஷா காகிதத்  தாள்களை வடிவங்களாக மடித்து அலங்காரத்திற்கான பொருட்களை உருவாக்கும் கலை (ஓரிகாமி) குறித்து பயிற்றுவித்தார். ‘

போர் வேண்டாம் எங்களையும் வாழ விடுங்கள்’ என்ற தலைப்பில் குழந்தைகளின் அச்சு நிகழ்ச்சி மற்றும் ஆடல், பாடல், நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் ஒருங்கிணைப் பாளர்கள் எம்.கோடீஸ்வரி, எஸ்.ராணி, கோபால், சுரேஷ், ஜூகைப் உள்ளிட்ட ஏராளமான சிறார்கள் கலந்து கொண்டனர். முன்ன தாக ஆர்.மதுவந்தி வரவேற் றார். நிதிஷ்குமார் நன்றி கூறினார்.