tamilnadu

img

ரேசன் கடைகளில் ஆவின் பொருட்கள்! அமைச்சர் தகவல்

சென்னை, ஆக. 28- சென்னை நந்த னத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் பொது மேலாளர் மற்றும் துணைப் பதிவாளர்கள் மாதாந்திர ஆய்வுக் கூட்டம், அமைச்சர் மனோ தங்க ராஜ் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த  அமைச்சர் மனோ தங்கராஜ், “அனைத்து  பகுதிகளிலும் ஆவின் பால் தடையின்றி  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 38 லட்சம் லிட்டர் ஆவின் விற்ப னை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஆவின் நிர்வாகம் புதிய பொருட்களை அறி முகம் செய்து, அவற்றைத் தீவிரமாக  சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கை கள் மேற்கொண்டு வருகிறது; குறிப்பாக ஆவின் பொருட்களை ரேசன் கடையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார். மேலும், “தீபாவளி போன்ற  பண்டிகை காலங்களில் ஆவின் பொருட் களைக் கூடுதலாக விற்பனை செய்வ தற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், பண்டிகைக் காலங்களில் ஆவின் பால் பொருட்கள் சலுகை விலையில் வழங்கப்பட்டு வருகின்றன” எனவும் குறிப்பிட்டார்.