9வது குளோபல் இசை விழா வேளச்சேரி பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி வளாகத்தில் நடைபெற்றது. இதனை மாநில அமைச்சர் க.பாண்டியராஜன் தொடங்கிவைத்தார். அலையன்ஸ் பிரான்சிஸ் இயக்குநர் புருனோ பல்சே, ஆற்காடு இளவரசர் புதல்வர் நவாப் முகமது ஆசிப்அலி உள்ளிட்டோர் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். உலகம் முழுவதிலும் இருந்து 14 கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கிராமிய கலை, மேற்கத்திய கலை, ஹிப் ஹாப், ரேப் என பலவிதமான இசைகள் இசைக்கப்பட்டன. 3 நாட்கள் நடைபெற்ற இந்த விழா சென்னை நகர மக்களுக்கு சிறந்த இசைவிருந்தை அளித்தது.