சென்னை, மார்ச் 27- தமிழ்நாட்டில் மக்கள வைத் தேர்தலுக்காக 68 ஆயி ரத்து 144 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுச் சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதி களுக்கு, ஏப்ரல் 19 அன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் புத னன்று (மார்ச் 27) முடிவடைந் தது.
இந்நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதி காரி சத்யபிரத சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித் தார். அப்போது, “தமிழ்நாட் டில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில், 3.06 கோடி ஆண்களும், 3.17 கோடி பெண்களும், 8,465 மூன்றாம் பாலினத்தவரும் அடங்கு வர்” என்றார்.
10.90 லட்சம் பேர் புதியவர்கள்
மேலும், “தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 68 ஆயிரத்து 144 வாக்குச்சாவடி கள் அமைக்கப்பட்டுள்ளன. 4 லட்சம் பணியாளர்கள் தேர் தல் பணிகளில் ஈடுபட உள்ள னர். இந்த தேர்தலில் 10 லட்சத்து 90 ஆயிரம் பேர் முதல்முறையாக வாக்க ளிக்க உள்ளனர்.
பணம், பொருட்கள் பறிமுதல்
மக்களவைத் தேர்தலை யொட்டி தமிழ்நாடு முழு மைக்கும் பறக்கும் படை யினரால் நடத்தப்பட்டு வரும் சோதனையில், மார்ச் 26 வரை ரூ. 33.31 கோடி பணம், ரூ. 33.35 கோடி மதிப்பிலான நகைகள், ரூ. 1.72 கோடி மதிப்பிலான மதுபானங்கள் உள்பட மொத்தம் ரூ. 69.70 கோடி மதிப்பில் பணம், பொருட்கள் பறிமுதல் செய் யப்பட்டுள்ளன” என்றும் சாகு கூறினார்.