tamilnadu

img

53 குடியிருப்புகள், 6 காவல் நிலையங்கள்:முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, ஆக. 1- காவல்துறையின் பணிகள் சிறக்க, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று மே 2021 முதல் இதுநாள் வரை, ரூ. 454.63 கோடி செலவில் 2,733 காவலர் குடியிருப்புகள், ரூ. 43.60 கோடி செலவில் 41 காவல் நிலைய கட்டடங்கள், ரூ. 69.83 கோடி செலவில் 14 காவல்துறை இதரக் கட்டணங்கள் மற்றும் ‘உங்கள் சொந்த இல்லம்’ திட்டத்தின் கீழ் ரூ. 55.19 கோடி மதிப்பி லான 253 குடியிருப்புகள் ஆகியவை காவல்துறையினரின் மேம்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்டம், ஜம்புநாதபுரத்தில் 3 கோடியே 97 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 29  காவலர் குடியிருப்புகள் மற்றும் உறை யூரில் 3 கோடியே 1 லட்சத்து 51 ஆயி ரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 24 காவலர் குடியிருப்புகள், என 6 கோடியே 99 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 53 காவலர் குடியிருப்புகள்;

சென்னை மாவட்டம் -டி.பி சத்திரம், ஜே.ஜே. நகர், புதுக்கோட்டை மாவட்டம் ரெகுநாதபுரம் மற்றும் மன்னார்குடியில் கட்டப்பட்டுள்ள 4 காவல் நிலையங்கள், திருச்சி  மாவட்டம் பீமா நகரில் ஒருங்கிணைந்த அமர்வு நீதிமன்ற காவல் நிலையம் மற்றும் சிந்தாமணியில் கட்டப் பட்டுள்ள ஒருங்கிணைந்த கோட்டை காவல் நிலையம் ஆகியவற்றையும் முதலமைச்சர் வியாழனன்று (ஆக.1) திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மேலக் கோட்டையூரில் இரண்டாம் கட்ட மாக கட்டப்பட்டுள்ள காவலர் பொதுப் பள்ளி, தென்காசியில் கட்டப்பட்டுள்ள மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் 53 காவலர் குடியிருப்புகளையும் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.