சிஆர்பிஎப் வீரர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை
ஆவடி அடுத்த பட்டா பிராமில் மத்திய சேமக் காவல் படை (சிஆர்பிஎப்) வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட் டுள்ளது. பட்டாபிராம் உழைப்பா ளர் நகர் 8ஆவது தெருவில் வசிப்பவர் ஜெகன். இவர் சிஆர்பிஎப்-இல் சித்தூர் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமராவதி தனது இரண்டு பிள்ளைகளுடன் பட்டா பிராமில் வசிக்கிறார். இவர் தனது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை மதியம் பாடியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர். பின்னர் திங்கட்கிழமை காலை தங்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டி ருப்பதைக் கண்டு அதிர்ச்சி யடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோகளில் இருந்த 30 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டி ருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பட்டா பிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். தங்கம் விலை சென்னை,மார்ச் 3- சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை யில் மாற்றம் இல்லை. ஒரு சவரன் 63 ஆயிரத்து 520 ரூபா ய்க்கு விற்பனை செய்யப்படு கிறது. ஒரு கிராம் தங்கம் 7 ஆயிரத்து 940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் அதி கரித்து ரூ.106-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறா யிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.