tamilnadu

img

ஆழியாறுக்கு சுற்றுலா சென்ற சென்னை கல்லூரி மாணவர்கள் 3பேர் நீரில் மூழ்கி பலி

ஆழியாறுக்கு சுற்றுலா சென்ற சென்னை கல்லூரி மாணவர்கள் 3பேர் நீரில் மூழ்கி பலி

பொள்ளாச்சி, ஏப்,25-  சென்னையில் இருந்து ஆழியாறுக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்களில் 3 பேர், ஆற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி  உயிரிழந்தனர்.   மீட்கப்பட்ட 3 பேரின் சடலமும், பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட் டது. சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் பிசியோதெரபி கல்லூரியில் படிக்கும் 14 மாணவர்கள் மற்றும் 14 மாணவி கள், அக்கல்லூரியின் கிளினிக்கல் தெர பிஸ்ட் சந்தோஷ் (23) என்பவர் தலைமை யில், கோவையில் உள்ள தனியார் கல்லூரி யில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரயில் மூலம் கோவை வந்துள்ள னர். கல்லூரியில் இரவு தங்கியிருந்து விட்டு, வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு ஆழி யாறு வந்தனர். ஆழியாறு அணை அருகே ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது, பிசி யோதெரபி 4-ம் ஆண்டு படிக்கும் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ஜோசப் ஆண்டன் ஜெனிப் (21), தென்காசியை சேர்ந்த ரேவந்த் (21), 3-ம் ஆண்டு படிக்கும் சென்னையை சேர்ந்த தருண் விஸ்வரங்கன் (19) ஆகியோர் தண்ணீரில் மூழ்கி உள்ளனர். அருகில் இருந்த மாணவர்கள் அவர்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளனர். உள்ளூர் பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரில் மூழ்கியவர்களை தேடியதில், மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஆழியாறு பகுதியை சேர்ந்த நாகேஷ் என்பவரின் உதவியுடன் 3 பேரின் சடலத்தையும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட் டது. இது குறித்து ஆழியாறு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

சென்னை, ஏப். 25- விவோ, அதன் டி தொடர் வரிசையில் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனைஅறிமுகம் செய்துள்ளது. மிகப்பெரிய 7300 எம்ஏஎச் உயர் திறன் கொண்ட பேட்டரி மற்றும் 90 வாட்ஸ் ப்ளா   ஷ்சார்ஜ் ஆகியவற்றைக் கொண்ட டி4 5ஜி, நேர்த்தியான மற்றும் மெல்லிய வடிவ மைப்பில் ஒப்பிடமுடியாத செயல்திறனைக் கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரேஷன் 3 செயலியால் இயக்கப்படும் இது, தடையற்ற பல்பணியை பயனர்களுக்கு வழங்குகிறது.  5000 நிட்ஸ் அதிக பிரகாசத்துடன் கூடிய குவாட்-வளைந்த அமோல்டு டிஸ்ப்ளேயை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்  ஆரம்ப  விலை ரூ.21,999 ஆகும்.