கண்காணிப்பில் குற்றப் பின்னணி கொண்ட 21 ஆயிரம் பேர்
சென்னை, மார்ச் 29- குற்றப் பின்னணி கொண்டவர்களை கண்காணிக்கும் விவ காரத்தில், தமிழக காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண் டும் என டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தலைமைத் தேர்தல் ஆணை யம் முன்பே அறிவுறுத்தியிருந்தது. அதன்படி மக்களவைத் தேர்தலை யொட்டி, மாநிலம் முழுவதும் குற்றப் பின்னணி கொண்ட 21 ஆயிரம் பேர் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதன் மூலம் பொதுமக்கள் அச்சமின்றி வாக்க ளிக்க இயலும் என்றும் பாதுகாப்புப் பணி யில் துணை ராணுவப்படையினர் ஈடுபடு வர் என்றும் தேர்தல் ஆணைய வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன.
மதிமுக சின்னம்: இன்று ஒதுக்கீடு
சென்னை, மார்ச் 29- மக்களவைத் தேர் தலில், மதிமுகவுக்கு ஒதுக் கப்பட்டுள்ள சின்னம் குறித்து சனிக்கிழமை யன்று தெரியவரும் என்று அக்கட்சியின் திருச்சி தொகுதி வேட் பாளர் துரை வைகோ கூறியுள்ளார். மதிமுக கேட்ட பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையம் மறுத்துவிட்ட நிலையில், வேறொரு சின் னத்தில் போட்டியிடத் தயார் என்றும் துரை வைகோ கூறியிருந்தது குறிப்பி டத்தக்கது.
தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் மீது கொலை முயற்சி உட்பட 33 வழக்கு
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி யில் போட்டியிடும் பாஜக வேட்பா ளர் கருப்பு எம்.முரு கானந்தம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர கத்தில் புதன்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.அப்போது, அவர் தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்தி ரத்தில் 2 கொலை முயற்சி, பொது சொத்தைச் சேதப்படுத்தியது உள்பட 33 வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில், ஒரு வழக்கு மட்டும் கைவிடப் பட்டது. இவர் தனது சொத்து விவரத்தில் தன் பெயரிலும், மனைவி பெயரிலும் ரூ. 2.26 கோடி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.