tamilnadu

img

தீபாவளி பண்டிகை சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்பு

தீபாவளி பண்டிகை  சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்பு

சென்னை, அக்.17- தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை மாநகரில் 18,000 போலீசார் பாது காப்பில் ஈடுபடவுள்ள னர். வருகிற 20ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு.பொதுமக்கள் புத்தா டைகள், பொருட்கள் வாங்க வும் வெளியூர் செல்லவும் முக்கிய இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. அந்த வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான தியாகராயர் நகர், புரசை வாக்கம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. பாண்டிபஜார், மயிலாப்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பலஇடங்களில் தற்காலிக உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்க ளில் ஆம்புலன்ஸ் வாக னங்கள் தயார்நிலை யில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.