மதுரை, கோவில்பாப்பாகுடி, அழகர்கோவில், மேலூர் ஆகிய ஊர்களில் உள்ள ஆட்டோ தொழிலாளர்களுக்கு பத்து நாட்களுக்குத் தேவையான அரிசி, காய்கறிகள் மற்றும் முககவசம் ஆகியவை சிஐடியு மதுரை புறநகர் மாவட்டக்குழு சார்பில் வழங்கப்பட்டன. மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் செ.கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.