சிஐடியு வடசென்னை மாவட்டக் குழு சார்பில் மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை அகில இந்திய மாநாட்டு நிதி 5 லட்ச ரூபாயை மாநில உதவி பொதுச் செயலாளர் வி.குமாரிடம் வழங்கினார். உடன் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், பொருளா ளர் வி.குப்புசாமி, நிர்வாகிகள் கே.ரவிச்சந்திரன், பி.என்.உண்ணி, சு.லெனின்சுந்தர் ஆகியோர் உள்ளனர்.
டிசம்பர் 3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மனிதசங்கிலி இயக்கம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் ஆர்.ஜெயச்சந்திரன், வடசென்னை மாவட்டச் செயலாளர் கி.ராதை, அண்ணாமலையார் டிரைவிங்ஸ்கூல் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் பலர் பங்கேற்றனர்.