சென்னை, ஜூன் 26- ஒரு டாஸ்மாக் கடைக்கு 2 சிசிடிவி கேம ராக்கள் என மொத்தமாக 3000 டாஸ்மாக் கடைகளில் 6000 சிசிடிவி கேமராக்களை பொருத்த தமிழக அரசு அனுமதி வழங்கி யுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளி யிட்டுள்ள அறிக்கை: ஒரு டாஸ்மாக் கடைக்கு 2 சிசிடிவி கேம ராக்கள் என மொத்தமாக 3000 டாஸ்மாக் கடைகளில் 6000 சிசிடிவி கேமராக்களை பொருத்த தமிழக அரசு அனுமதி வழங்கி யுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மண்டல வாரியாக எந்த கடை களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தலாம் என மாவட்ட மேலாளர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதிகமாக மது விற்பனை நடக்கும் கடை கள், ஏற்கனவே திருட்டு சம்பவங்கள் நடை பெற்ற கடைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ள கடைகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் 535 கடைகள், கோயம்புத்தூர் மண்டலத்தில் 450 கடைகள், மதுரை மண்டலத்தில் 755 கடைகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக் கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறியுள்ளது.