tamilnadu

img

தில்லியில் தமிழர் குடியிருப்புகளை புல்டோசர் மூலம் இடிக்கும் பாஜக அரசை கண்டித்து வாலிபர்கள் போராட்டம்

தில்லியில் தமிழர் குடியிருப்புகளை புல்டோசர் மூலம்  இடிக்கும் பாஜக அரசை கண்டித்து வாலிபர்கள் போராட்டம்

ல்லியில் தமிழர் குடியிருப்புகளை புல் டோசர் மூலம் இடித்து தமிழர்களை வெளி யேற்றும் பாஜக அரசைக் கண்டித்து இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர்  மாவட்டக்குழு சார்பில் அனுப்பர்பாளையத் தில் வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில், தில்லி, ஜங்புரா மதராசி கேம்ப்பில் 400க்கும் மேற்பட்ட தமிழர் குடியிருப்புகளை பாஜக அரசு புல்டோசர் கொண்டு இடித்து,  தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கைக் கையில் ஈடுபட்டு வருகிறது. இதை உடனடி யாக நிறுத்த வேண்டும். ஏழை மக்களின் வயிற் றில் அடிக்கும் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வையும், பெட்ரோல், டீசல்  மீதான கலால் வரி உயர்வையும் உடனடியாக  திரும்ப பெற வேண்டும். இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் வக்பு வாரிய திருத்த சட்டத்தை உடனடி யாக திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாவட்டத் தலைவர் எஸ்.அருள், மாவட்டச் செயலாளர் கே.பாலமுரளி, பொரு ளாளர் க.சிந்தன், வேலம்பாளையம் நகரச்  செயலாளர் எஸ்.வசந்த் ஆகியோர் கண்டன  உரையாற்றினர். மாவட்ட துணைத் தலை வர் ராம்கி, துணைச்செயலாளர் வீ.பால சுப்பிரமணி, வடக்கு ஒன்றியச் செயலாளர் சந் தோஷ், வடக்கு மாநகரச் செயலாளர் எஸ். விவேக் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிர வீன்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்